PROMISE OF IMMANUEL இம்மானூவேல் பற்றிய உறுதிமொழி. ஏசாயா: 7:10-17, திருப்பாடல்: 98. 1 பேதுரு:3:8-16. மத்தேயு 1:18-25.

ஏசையா 7:11-14.

முன்னுரை: ஆண்டவர் ஏசையா தீர்க்கதரிசி மூலமாக ஆகாசுக்கு (Ahaz) அளிக்கப்பட்ட செய்தி என்னவென்றால், 11. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.12 ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.13 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும்விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

               ஆகாஷ்.Ahaz.png

ஆகாஷ் ஊசியாவின் பேரன். யோதாமின் குமாரன். யூத நாட்டின் பன்னிரண்டாவது அரசன் இவன் தன் 20ம்வயதில் யூதேயாவின்  அரசனாக்கப்பட்டான். இவன் காலம் கி.மு.732–716. 16 ஆண்டுகள் ஆட்சி செய்தான். தாவீதின் யூதா வம்சத்தை சேர்ந்தவன். மிகக் கொடுமையான மன்னனாக கருதப்பட்டான். ( 2 . சாமுவேல்:16:2) . இவனுடைய பெயர் இயேசுவின் வம்ச வரலாற்றில் (genealogy) மத்தேயு 1:8 ல். கூறப்பட்டுள்ளன.ஆகாசுக்கு எதிராக சிரியா, எப்ராயிமோடு கூட்டணி அமைத்துகிளர்ந்தெழுந்தது. இவர்களை எதிர்க்க பலமற்ற ஆகாஸ் அசீரியாவின் உதவியை நாடினார்.இத்தருணத்தில் ஏசாயா தீர்க்கர் “நீங்கள் கடவுள் மீது நம்பிக்கைகொ ள்ளாவிடில் நிலைநிற்க முடியாது எனவே கடவுளின் உதவியை நாடுங்கள்'' என்றார். இதற்குச் சான்றாக இம்மானுவேல் என்னும் அடையாளத்தை கடவுள் கொடுப்பார் என்றார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கும் படியாக ஏசையா கேட்கிறார். பழைய ஏற்பாட்டில்வாக்களிக்கப்பட்ட அனைத்தும் இயேசுவின் வருகையால் புதிய ஏற்பாட்டில்நிறைவேறியது. 

2. இம்மானுவேல்:

இம்மானுவேல் என்ற வார்த்தை பைபிளில் மூன்று முறை மட்டுமே தோன்றுகிறது. ஏசாயா 7: 14-ல் உள்ள குறிப்பு தவிர, ஏசாயா 8: 8-ல் காணப்படுகிறது, அது மத்தேயு 1: 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.இம்மானுவேல் தேவன் நம்மோடு இருக்கிறார். நாம் மற்றவர்களின் இருதயங்களில் நல்லவர்களாக இருக்கின்றோமா? நேசிக்கின்றவராக இருக்கின்றோமா! அன்பாக இருக்கின்றோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக என்றார்கள் நாம் அனைத்து மக்களையும் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் கிறிஸ்துமஸின் செய்தியாகும்.ஏனென்றால் ஆண்டவர் அன்பாக இருக்கிறார். அன்பாக இருப்போம், அன்பை கொடுப்போம், அமைதியை தருவோம்.1.பேதுரு: 4:8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். 

ஏசாயா 7: 14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இயேசுவைப் பற்றி 700- ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்: "இம்மானுவேல்’ என்பது அவர் நம்மோடு இருக்கிறார்; நம்மோடு பூமியிலே மனிதனாகப் பிறந்து வாழப்போகிறார் என்பதையும்குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. இந்த இம்மானுவேலர் எப்பொழுதெல்லாம் நம்முடனே இருக்கிறார்? உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து மத்.28:20ல் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அவர் நம்மோடு எப்போதும் இருக்க விரும்புகிறார். வெளிப்படுத்தின விசேசம்:3:20 

" இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடேபோஜனம்பண்ணுவான்." இயேசு நம்மோடு இருக்கவும் நம் உள்ளத்தில் வாசமாய் இருக்கவும், தங்கி போஜனம் பண்ணவும், விரும்புகிறார். அவர் தட்டிக் கொண்டே இருக்கிறார், நம் இதய கதவை, அவருக்காக திறந்து வைப்போம். இயேசு "ஆதியும் அந்தமுமானவர், 
அல்பா ஒமெகாவுமானவர் -"
"இருக்கிறவராய் இருக்கிறார் "(யாத்.3:14).
"நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் "- ஆனால் மனிதன் மாறுகிறவன். ஆண்டவரை மறக்கிறான். சில நேரங்களில் மறுதலிக்கிறான்.
இம்மானுவேல் என்பது ஒரு அடையாளம். 
3.இம்மானுவேல் பிறப்பிற்குயோசேப்பின் குழப்பம்:
தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு நீ பயப்படாதே;  அவளிடத்தில் உற்பத்தியாயிருந்து பரிசுத்த ஆவியினால் உண்டானவர், அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; தம்முடைய ஜனங்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து காப்பாற்றுவார். " (மத்தேயு 1: 20-21, )
நம் பெயரும் செயலும் ஆண்டவருக்கு பிரியமாய் இருக்க வேண்டும். ஆண்டவர் தன் பெயருக்கு ஏற்றவாறு நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார்.இயேசுவினால் வரும் மீட்பு கடவுள் நம்மோடு இருப்பதன் வழியாக ஏற்படும்மீட்பு என்பது தெளிவு. இயேசு கன்னிகையின் வயிற்றில் பிறந்ததன்வழியே கடவுள் மக்கள் மத்தியில் வந்து விட்டார். மரியாள் கருவுற்றபோதுகடவுள் மனுவுரு ஏற்றுவிட்டார். பிறந்தபோது விண்ணுலக கடவுள்,மண்ணுலகில் கால் பதித்தார். அனைவரும் அறியும் வண்ணம்
வரலாற்றுக்குள் வந்து வாழ்ந்தார். இம்மானுவேல் என்ற பெயருக்குப்
பதிலாகவே இயேசு என்ற பெயர் சூட்டப்பட்டதாக மத்தேயு சொல்லுகிறார்.
இதனால் இயேசுவினால் வரும் மீட்பு கடவுள் நம்மோடு இருப்பதன்மூலமாக ஏற்படும் மீட்பு என்பது தெளிவு.ஆதிப்பெற்றோரால் இழந்துபோன வாழ்வை இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையால் நாம் நலம்பெறகடவுள் இம்மானுவேலராக வந்தார். கடவுளின்பிள்ளைகள்எப்படிவாழவேண்டும் என்பதை செயல் முறையில் வாழ்ந்து காண்பிக்க வந்தார்.உலக மக்கள் அனைவருக்கும் மீட்பை அறிவித்து கடவுளின்
பிள்ளைகளாக மாற்றவும் நம்மோடு உலக முடிவு மட்டும் இருக்கவும்
கடவுள் இம்மானுவேலராக வந்தார்.இம்மானுவேல் என்பதற்கு கடவுள் நம்மோடிருக்கிறார் என்பது பொருள்.நாம் கடவுளோடு இருக்கிறோமா? கடவுள் நம்மைத் தேடி
இம்மானுவேலராக வந்தார். நாம் கடவுளைத் தேடுகிறோமா? நம்மைக்
கண்டெடுத்த அவரை நாம் காண்கிறோமா? சிந்திப்போம். கடவுள்
மனோபலங்கொண்டு தைரியமாய் இருக்கச் சொல்லுகிறார். உலக
முடிவுமட்டும் நம்மோடு இருக்கவாக்களித்திருக்கிறார். இயேசுவில் எல்லா
தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின. இயேசுவின் வாக்குத்தத்தங்கள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாழுவோம்.
4.கடவுளின் உறைவிடம்:
திரு வெளிப்பாடு:21:3,4.
"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாலய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார் . அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன என்றது"
கடவுள் இயேசுவில்
நம்மோடிருக்கிறார். அவர் இம்மானுவேலர்.
வரலாற்றின் போக்கை மாற்றி அமைக்கிற கடவுளே!
நீர் எங்கோ இருக்கிறவரல்ல எங்களோடிருக்கிறவர்.
இந்த நிச்சயத்தில் துணிவோடு உம் மக்களாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.


                         _______

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80