லெந்து முதல் வெள்ளி. The first Friday on Lent ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். (250) The Lord who comforts. ஏசாயா 40:1-11.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந் து கால முதல் வெள்ளியின் தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். " இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபி லோனிய சிறை இருப்பிற்கு பிறகு எருசலேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு நம்பிக்கையின் வார்த்தை யாக இப்பகுதி அமைகிறது. கர்த்தர் சகலவிதமான ஆறுத லின் தேவனாய், அவர் துன்பத்தி ல் இருப்போரைத் தேற்றி, நொறு ங்குண்ட இருதயங்களுக்கு சமீபமாயிருந்து, தாயைப் போல ஆறுதல் அளிப்பவர். "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" (ஏசாயா 51:12,) என்று கூறும் அவர், நம் கண்ணீ ரைத் துடைத்து, கவலைகளிலி ருந்து விடுவித்து, அமைதியை யும், தைரியத்தையும் அருளுப வர். 1.ஆறுதல் அளிக்கும் ஆண்ட வர் .தொடக்கநூல் 16, 21; அதிகாரங்கள். நண்பர்களே நம் ஆண்டவர் துன்பத்தில் ஆறுதல் அளிக்கி ன்ற தேவன் தொடக்கநூல் 16,21அதிகாரங்களில் ஆபிரகாம் மனைவி சாராளின் கொடுமை யால் தப்பி ஓடிய ஆகாரைத் பாலைவனத்தில் கைவிடப்பட்டு, தன் மகன் இறப்பதைப் பா...