புனித வெள்ளி. ஏழாம் வார்த்தை. என் உயிரை ஒப்படைக்கிறேன்.(272) லூக்கா 23:44-46
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஏழாம் வார்த்தை, " தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (லூக்கா நற்செய்தி 23:46) லூக்கா 23:44-46-ல், இயேசுவின் சிலுவை மரணத்தின்போது 12 மணி மதியம் முதல் 3 மணி வரை ஏற்ப ட்ட இருள், தேவால யத் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது, மற்றும் "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற வார்த்தைகள், பாவம் மன்னிப்பு மற்றும் தேவனை அணுகும் புதிய வழியைஉறுதிப் படுத்துகின்றன. இது தேவனி ன் நியாயத்தீர்ப்பு, பாடுகளின் முடிவு மற்றும் பிதாவுடனான பரிபூரண நம்பிக்கையை வெளி ப்படுத்துகிறது. 1 ஆதியில் இருந்த இருள்; அன்பர்களே! மண்ணுலகு உருவ ற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி யிரு ந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. (தொடக்கநூல் 1:2) அவ்வாறே! நண்பகல் முதல் 12 மணிமுதல் மூன்று மணி நேரம் வரை நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது . இது ஒரு இயற்கை க்க...