வழிபாடு. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்.(293) Worship: In God's Presence, for God's Purpose. எசாயா 6:1-8, திருத்தூதர் பணிகள் 2:42-47, திருப்பாடல் 100, மாற்கு: 12:28-34.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, ' வழிபாடு:. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்". வழிபாடு எப்படி தோன்றியது? How did Worship originate? அன்பர்களே! ஆதிமனிதன் எவைகளை கண்டு அஞ்சினா னோ, பிரமித்தானோ அவை களை மாபெறும் சக்தி என வணங்க ஆரம்பித்தான். ஆதி மனிதர்கள் சூரியன், மழை, விலங்குகள் மற்றும் பூமியை சக்திவாய்ந்த ஆற்றல்களாகக் கருதினர். உயிர்வாழ்வதற்காக அவர்கள் இந்த ஆற்றல்களைத் திருப்திப்படுத்த முயன்றனர். மக்கள் மரியாதை செலுத்துவத ற்கும் அருளைப் பெறுவதற்கும் உணவு, விலங்குகள் அல்லது சிறப்புப் பொருட்களைப் படைப் பதற்காகக் கல் பலிபீடங்களை யோ அல்லது புனிதத் தலங்க ளையோ கட்டினார்கள்.உலகில் வழிபாடு 30,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது Upper Paleolithic period (பழைய கற் காலம்) முன்பாக வழிபாடு தோன்றியதை தொல்பொருள் ஆய்வு வெளிப்படுத்துகிறது. மக்கள் எப்போது திருவிவலி யத்தில் வழிபாட்டைத் தொட ங்கினர்? When did people start to worship in the Holy Bible? அன...