தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. (279)Holy Spirit : Promise of the Indwelling Presence. எசாயா 59: 14-21 திருப்பாடல் 143, எபிரேயர் 10: 8-18.யோவான் 14:15:21.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஆறாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. " தூய ஆவி, விவிலியத்தில் புறா வடிவில் தூய ஆவி சித்தரிக்கப்ப டுகிறார். தந்தை (பிதா), மகன் (இயேசு கிறிஸ்து) ஆகியோருடன் இணைந்து உள்ளுறைந்து செயல்படுபவர்.மனித இதயங் களில் வாசம் செய்து, வழிகாட்டி, ஆறுதல்படுத்தும் தேற்றரவா ளர் என்றும் அழைக்கப்படு கிறார்.மூவொரு இறைவனின் (Trinity) மூன்றாவது ஆள் ஆவார். தூய ஆவியின் கனிகள்;The Fruit of the Holy Spirit) அன்பர்களே!கலாத்தியர் 5:22,23 ன் படி தூய ஆவியின் கனிகள், அன்பு,(love,) மகிழ்ச்சி,(joy,) அமைதி, (peace,,) பொறுமை,(forbearance), பரிவு,(kindness), நன்னயம்,(goodness,) நம்பிக்கை, (faithfulness,) கனிவு, (gentleness), தன்னடக்கம் (self-control). என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட் டத்திற்கு இடமில்லை. பரிசுத்த ஆவியின் ஒன்பது முக்கிய கனிகள் (நற்குணங்கள்) ஒரு க...