உணர்வுகளை விஞ்சும் நம்பிக்கை : வாழ்வு பொருளற் றுப் போகையில் கடவுளை பற்றுதல். (283) Faith over feelings, Trusting God when life doesn't make Sense. எரேமியா 29:10-14, எபிரேயர்: 11: 17-31, திருப்பாடல் 37: 23-40, மாற்கு: 4: 35-41.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உணர்வுகளை விஞ்சும் நம்பி க்கை : வாழ்வு பொருளற்றுப் போகையில் கடவுளை பற்று தல்" என்பதாகும். அன்பர்களே! உணர்வுகள் (Feelings) என்பவை, ஐம்புலன்களின் வழியே நாம் பெறும் அனுபவங்கள்.மகிழ்ச்சி, கோபம், பயம், ஆச்சரியம், துக் கம்ஆகும். இயற்கையான உணர்வுகள்.அன்பு, வெறுப்பு, குற்றவுணர்வு, பரிவு, பெருமை ஆகியவை மனம் சார்ந்த உணர் வுகள். மனிதன் உணர்வுகளின் கட்டாக (Bundle) இருக்கிறான். இது உளவியல் ரீதியானது. ஒரு சிலர் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப் பார்கள். ஒரு சிலரோ உணர்வு களையும், உணர்ச்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்க ளாக இருப்பார்கள். வேறு சிலரோ மற்றவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதும், ஆறுதல் சொல்வதும், ஆதரவாக இருப்பது உறவை பலப்படுத்தும் உறவுகளை மேம்படுத்த மற்றவ ர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்...