சாம்பல் புதன். Ash Wednesday. லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.(249) Lent: A Call to Renewal. எசேக்கியேல் Ezekiel: 37: 24-28. திருப்பாடல் : 51, உரோமையர் 11:33 - 36,12:1,2, மத்தேயு 6:5-18
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால சாம்பல் புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு. தவக்காலம் என்றால் என்ன? What is Lent) அன்பர்களே! தவக்காலம் என்பது கிறிஸ்தவர் களாகிய நாம் இயேசு கிறிஸ்து வின் சிலுவைப் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவு கூர்ந்து, சாம்பல் புதன் (Ash Wednesday)முதல் ஈஸ்டர் ஞாயிறு வரை அனுசரிக்கும் 40 நாட்கள் கொண்ட புனிதமான ஒருத் தல் மற்றும் தவம் செய்யும் காலமாகும். இக்காலத்தில் இறைவேண்டல், தியாகம், நோன்பு மற்றும் தானதர்மங்கள் மூலம் ஆன்மீகத் தேடலை வலுப்படுத்தி,நம் பாவங்களுக் காக மன்னிப்பு கேட்டு இறை வனுடன் ஒப்புரவா கிற, (Reconciliation)காலமாகும். புத்தாக்கம் என்பது நம்முடைய உடல், ஆன்மா, மனசு அனைத் தையும் புதுப்பித்துக் கொள்வ தாகும் இந்த லெந்து காலத்தில் நம் பாவங்கள் அனைத்தும் விட்டு விடுதல் வேண்டும். புதிய மனிதனாய் உரு எடுப்பதே நம்மை நாமே புத்தாக்கம் செய்யும் செயலாகும் தவக்காலத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? What are...