The fifth Friday of Lent. ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர் (258) The Lord who is with the servant. ஏசாயா 50:4-11.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 5ஆம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," " ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர்." அன்பர்களே! யார் ஊழிலயன்? ஊழியன் என்பதற்கு ஜான் கால்வின் (1509–1564)(One of the Fathers of Modern Democr acy) கூறும் கருத்துபடி ( பதினாறாம் நூற்றாண்டின் ஒரு மிகச்சிறந்த பிரெஞ்சு இறையி யலாளர், போதகர் மற்றும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஆவார். இவர் கால்வினிசம் (Calvinism) என்றழைக்கப்படும் கிறிஸ்தவ இறையியல் கொள் கையை உருவாக்கினார்) " கிறிஸ்து எவ்வாறு ஒரு "கல்வி மானைப் போல" கர்த்தருக்குச் செவிசாய்த்து, போதனைகளைப் பெற்று, இளைப்படைந்தவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கும் போதகராகச் செயல்பட்டாரோ அவ்வாறு செயல்படுபவரே கர்த்தரின் ஊழியக்காரன்". என்கிறார்.திருவிவலியம் “ ஊழியர் ” என்பதற்கு " டையக் கோனாஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் அடிக்கடி பயன்படுத்துகிறது. சமய கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் இந்த வார்த்தையை இவ்வாறு விளக்குகிறது: “இது உயர்...