அருட்பொழிவுத் திருப்பணி. புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு (288) Ordained Ministry: Call to serve not for glory.எரேமியா: 1:4-10, பேதுரு: 5:1-4, திருப்பாடல்: 132, மத்தேயு: 20: 20- 28
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் அருட்பொழிவுத் திருப்பணி . இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு.Ordained Ministry: Call to serve not for glory . அன்பர்களே! அருட்பொழிவுத் திருப்பணி என்றால்,"ஒருவர் இறைப்பணிக்காக, பேராயம் மற்றும் திருச்சபையின் வழி முறைகளுடன் அதிகாரப்பூர்வ மாகப் தேர்வு செய்யப்பட்டு, திருச்சபையின் பேராயர் அவர் கள், அந்த நபரின் தலையில் கைகளை வைத்து இறைவேண் டலுடன்,, தூய ஆவியின் அருளா ள் திருநிலைப்படுத்தப்பட்டு, இறையியல் கல்வியில் பயிற்சி அளிக்கப்படு தேர்வானவர்களே அருட்பொழிவு பெற்றவர்கள் ஆவர். ஆக்ஸ்போர்டு அகராதியின் (Oxford Dictionary)படி, அருட்பொ ழிவு திருப்பணி (Ordained Minis try) என்பது, ஒரு மதகுரு அல்லது பாதிரியார் தனது திருச்சபையி னால் (அல்லது சமய அமைப்பி னால்) முறையாக அங்கீகரிக்கப் பட்டு, பிராத்தனை மற்றும் கை கள் வைத்து ஆசீர்வதிக்கும் சடங்கு மூலம் (Ordination) மதப்பணிகளுக்காகப் பிரத்யே கமாகப் பொறுப் பேற்றுச் செய்ய...