பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும்.(297). Pluralism: Faith and Friendship. எரேமியா: 29:1-7, உரோமையர்12:8-18, திருப்பாடல்: 37:1-24, லூக்கா: 11:5-10
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " பல் சமயச் சூழல் நம்பிக்கையும், நட்பும். Pluralism: Faith and Friendship " பல் சமயச் சூழல் என்றால் என்ன? What is Pluralism? அன்பர்களே! பல் சமயச் சூழல் என்றால்,"சட்டத்தின் முன்னேயும் சமூகத்திலேயும் அனைத்து மத மக்களுக்கும் சமமான உரிமை களை சமத்துவ நோக்கோடும், அனைத்து மதத்தினரும் தங்க ளின் நம்பிக்கைகளைக் கடைப் பிடிக்க சுதந்திர உரிமையை பெற்று, ஒருவரையொருவர் அனுசரித்து மற்ற மதங்களை மதித்து அதன் மீது அவதூறு பேசாமல், அவற்றின் வழிபாடு களையும் கருத்துக்களையும் மதித்து நடப்பதே பல் சமயச் சூழல் என்பதாகும். ஆனால், இன்றைய ஒன்றிய அரசு பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) ஒன்றை கொண்டுவந்துள்ளது. சாதி, மதம், இனம் மற்றும் பாலின வேறுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெ டுத்தல் மற்றும் சொத்துரிமை போன்ற தனிநபர் சட்டங்களை ஒரே மாதிரியாக அமல்படுத்து வதே பொது சிவில் சட்டம் எனப்படும் இத...