இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல். (294) Strangers No more: Welcoming the Migrants and Refugees லேவியர் 19:9-10, 33-37, திருத்தூதர் பணிகள் 8:1-8, திருப்பாடல் 146, மத்தேயு 2:13-15.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, '" இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல்." அன்பர்களே! "இனியும் அந்நியரல்ல" என்பது திருவிவிலிய அடிப்படையில் "எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதா யத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். (எபேசியர் 2:19) வசனத்தைக் குறிக்கிறது.இதன் மூலம் மனிதர்கள் அனைவரும் கடவுளின் குடும்பத்தினர் மற்று ம் சக குடிமக்கள் என்ற ஆன்மீக ஒருமைப்பாட்டைப் பெறுகின்ற னர். இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அன்போடு ஏற்று அரவணைக்க வேண்டும் என்ற சமூக மற்றும் மனிதாபிமா னப் பார்வையையும் வெளிப் படுத்துகிறது. முன்பு ஒதுக்கப்பட்டவர்கள், இப்போது கடவுளின் குடும்பத் தில் முழு உரிமையும் பெற்றுள்ள னர்.அனைவரும் தூயவர்களுட ன் சமமான சக குடிமக்கள் ஆவர். அகதிகள் மற்றும் புதியவர்களை அந்நியர்களாகப் பார்க்காமல் அன்பு செலுத்த அழைப்பு விடுக் கிறது. ஆண்டவர...