திரித்துவ ஞாயிறு.Trinity Sunday.திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு.(281)Trinity. The divine communion of Love. எசாயா 48:12-17.திருப்பாடல் 33. எபேசியர் 1:3-14, யோவான் 3:8-16.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து தூய ஆவியை பொழிந்த பெந்தகோஸ்தே ஞாயிறுக்குப்பின் வரும் ஞாயி று திரித்துவ ஞாயிராகும் . இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, திரித்துவம். அன்பின் தெய்வீக கூட்டுறவு ஆகும். திரித்துவ ஞாயிறு என்றால் என்ன? What is Trinity Sunday? திருச்சபையில், ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாக விளங்கும் மூவொரு கடவுளின் (Holy Trinity) மாபெரும் மறைபொருளைச் சிறப்பித்துக் கொண்டாடும் ஒரு பெருவிழா ஆகும்.கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை மைய மே திரித்துவம் தான். அதாவது, ஒரே கடவுள் (இறைத் தன்மை), தந்தை, மகன், தூய ஆவி என மூன்று தனித்தனி ஆட்களாக நிலைத்திருக்கிறார். தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள்; ஆனால் இவர்கள் மூவரும் தனித்தனி கடவுள்கள் அல்ல, ஒரே கடவுள். இக்கோட்பாட்டை, மனிதனின் அறிவால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு "மறை பொருள்" (Mystery). இதனை மனித அறிவால் அளவிட முடியா து, மாறாக விசுவாசத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிய...