அரவணைத்து வாழ அழைப்பு.(255) Call to be Inclusive. ஏசாயா: 56:1-8, திருப்பாடல் 86. திருவெளிப்பாடு 7:9-17, மத்தேயு : 15:21-28.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," அரவணைத்து வாழ அழைப்பு." இந்த ஞாயிற்றுக் கிழமை மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினத்தில் பெண்களை அரவணித்து வாழவும் ,சமுக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் சம உரிமை களுடன் பங்குபெற செய்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். மோசே (Moses) மூலம் வழங்கப்ப ட்ட பெண்களின் சொத்துரிமை கள், முக்கியமாக எண்கள் 27 மற்றும் 36 ஆகிய அதிகாரங்க ளில் கூறப்பட்டுள்ளன. செலோபெயாத்தின் புதல்விய ரின் வழக்கை விசாரித்த மோசே, ஆண் வாரிசுகள் இல்லாத குடும் பங்களில், பெண்கள் தங்கள் தந்தையின் சொத்துக்களை வாரிசாகப் பெறலாம் என்ற புதிய சட்டத்தை தந்தை பெயரில் சொத்து இருந்து, மகன் இல்லாத பட்சத்தில், அந்த சொத்து மகள்க ளுக்குச் சொந்தமாகும் எனறு நிறுவினார். அன்பர்களே! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி க்கு ஏற்ப, பிரிவினைகளை மறந் து, சாதி, மத, சமூக வேறுபாடுக ளைக் களைந்து, அன்போடும், சகிப்புத் தன்மையுடனும்...