என் ஆண்டவரே! என் கடவுளே!(274) My Lord and My God. எசாயா 45: 21-25, திருப்பாடல் 35: 18-28, பிலிப்பியர் 3:18-21, யோவான் 20: 21-29
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," என் ஆண்டவரே! என் கடவுளே!" உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட திதிமஸ் Didymus,என்ற தோமா (Thomas) கூறிய புகழ் பெற்ற விசுவாச அறிக்கை. இயேசுவின் உயிர்த் தெழுதலை மற்ற சீடர்கள் கூறியபோது தோமா நம்பவில்லை.தோமா, சீடர்களிடம், "நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி அவர் விலாவில் என் கையை இட்டால ன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். ஒரு வாரம் கழித்து, அதாவது, எட்டு நாளுக்குப் பிறகு இயேசு தோமாவுக்குக் காட்சி தந்து, தன் காயங்களைத் தொட்டுப் பார்க் கச் சொன்னார், தோமா, "என் ஆண்டவரே, என் கடவுள்" என்று இயேசுவை வணங்கினார். இவ்வார்த்தையே, தோமாவின் கல்லறையில் பொறிக்கப்பட்டு ள்ளன. "நீ என்னைக் கண்டதால் நம்பி னாய்; காணாமலே நம்புகிறவர் கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறினார். விலாவில...