பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனின் குரலை உணர்தல் (280) Hearing God's Voice in a noisy World . 1அரசர்கள் 19:11-18, திருப்பாடல் 29.திருத்தூதர் பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனி ன் குரலை உணர்தல்" என்ற தலைப்பாகும். பெந்தெகோஸ்தே ஞாயிறு என்றால், கிறித்து உயிர்த்தெழுந் த ( ஈஸ்டர்) திருநாளுக்குப் பிறகு வரும் 50வது நாளை குறிக்கும். இது ஒரு முதன்மைக் கிறிஸ்த வப் பெருவிழா ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதலு க்குப் பிறகு, தூய ஆவியானவர் (Holy Spirit) அவரது சீடர்கள் மீது இறங்கி வந்ததை இது குறிக்கிற து.இது திருச்சபையின் தொடக் கமாகவும் கருதப்படுகிறது. பரிசு த்த ஆவியின் வல்லமையைப் பெற்ற சீடர்கள், தைரியமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கிய நாள். எனவே, இது திருச்சபையின் (Church) பிறந்த நாளாகவும் போற்றப்படுகிறது. பெந்தெகோஸ்தே ' என்றால் கிரேக்க மொழியில் 'ஐம்பதாம் நாள்' என்று பொருள். யூதர்க ளின் அறுவடைத் திருநாளான ' ஷவுவோத் ' (Shavuot) பண்டிகை யுடன் இது தொடர்ப...