Why did the Angel select the Shepherds to inform the birth of Christ.? ஏன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மேய்ப்பர்களுக்கு(இடையர்கள்) அறிவிக்கப்பட்டது. லூக்கா2:8-20..தொடக்கநூல்: 46: 31-34. யோவான் 10:1-42.

முன்னுரை: இஸ்ரவேலரின் குடும்பத் தொழிலே ஆடுகளை மேய்ப்பது. ஆதாமின் மகனான ஆபேல் ஆடுகளை மேய்த்தான் .அவன் ஆண்டவருக்கு பலியும் செலுத்தினான். ஈசாயின் ‌ மகன்களான ஏசா அவன் சகோதரர் யாக்கோபு ஆட்டிடையர்கள். அதிகமாக ஆடுகளைவைத்திருந்தனர்.மோசே,  தாவிது ஆடுகளை மேய்த்தார்கள். தாவீது ஆண்டவனை " கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்" என உறுதியாக கூறுகிறார். ( திருப்பாடல்: 23.)
 ஏசையா தீர்க்கர், ஆண்டவரை, "மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசாயா 40:11)
எரேமியா தீர்க்கதரிசி இஸ்ரவேலறை ஆடுகளாக  குறிப்பிடுகிறா‌ர்.பல்வேறு தேசங்களளிருந்த இஸ்ரவேலறை ஒன்று சேர்த்திட "ஒரே நாடு, ஒரே மேய்ப்பன்" என்ற சிந்தனையில்  "ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் தூரத்தியிலிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். அவைகளைமேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள்பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” 
(எரேமியா 23:3-4). இஸ்ரேவேளர் யெகோவா தேவனை மேய்ப்பராக கருதினர். மேய்ப்பராய் தங்களை பாது காப்பதாக நம்பினர். 
யெகோவா பின்வருமாறு வாக்குறுதியளித்தார்: “நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும்  நியாயந்தீர்ப்பேன். அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.”  
கர்த்தரும், நம் இரட்சகரான இயேசு கிறிஸ்துவே நல் மேய்ப்பனாக வருகிறார் என ஏசையாதீர்க்கர்.40:10,11.
திட்டமாய் கூறினார்.
நானே நல்ல மேய்ப்பன்:
2. இயேசுவே நல் மேய்ப்பர்:  ஏன் ஆண்டவர் மேய்ப்பர்களை தேர்வு செய்தார். காபிரியேல் தூதன்,(லூக் 2:10-12 ) அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்குஅறிவிக்கிறேன்.””இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலேபிறந்திருக்கிறார்.”“பிள்ளையை துணிகளில் சுற்றி, முன்னணியிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” இந்த செய்தி கலிலேயா நாட்டில் மேய்ப்பர்கள் தமது மந்தையைக் காத்துக்கொண்டிருக்கும் போது அறிவிக்கப்பட்டது.

உடனே பரமசேனையின் திரள் அந்த தூதனுடன் தோன்றிதேவனுக்குமகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். லூக் 2:13-14  தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு உடனே மேய்ப்பர்கள்பெத்லகேமுக்கு விரைந்து வந்து முன்னணையில்கிடத்தியிருந்த பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டஎல்லாவற்றிற்காகவும்தேவனைமகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.- 

மேய்ப்பர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள் இரவும் பகலும் ஆடுகளுடன் இருப்பார்கள். புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீர் அண்டை ஆடுகளை நடத்தி செல்வர். ஆடுகளுக்கு முன்பாக சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.உயரமான கோலை (தடியை) கையில் எப்போதும் வைத்திருப்பர். கானாமல் போன ஆட்டை தேடி அலைந்து திரிந்து கண்டுபிடிப்பர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் கடவுளை காண்பார்கள் எனவே ஆண்டவரின் பிறப்பு ஆட்டிடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கர்த்தர் என்  மேய்ப்பராய் இருக்கிறார் என்றுறைத்த தாவீதின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பராய் தீர்க்கதரிசிகள் கூறியவாறு இவ்வுலகில் தோன்றினார். இது குறித்து 
ஏசாயா 55:4-⁠ல் பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தது: “இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும்,ஜனங்களுக்குத்தலைவராகவும்,அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.” அனைத்து தேசங்கள், இனங்கள், ஜனங்கள், மொழிகள்ஆகியவற்றிலிருந்தும்அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; அவ்வாறே ‘வேறே ஆடுகளும்’ கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இயேசு "நானே நல்ல மேய்ப்பன்; … நான் என்னுடையவைகளை அறிந்தும்என்னுடையவைகளால்அறியப்பட்டுமிருக்கிறேன் (யோவான் 10: 14,15). என் ஆடுகளை நான் அறிந்திருக்கிறேன் . கடவுள் நம்மை அறிந்திருக்கிறார். நாமெல்லாம் வழி தப்பி அளைந்துபோனோம்.மேய்ப்பர்களின் விரோதிகள் யார் என்றால் 1. ஓநாய் 2. சிங்கம் 3. புலி 4. கரடி 5. திருடர்கள் 6.கழுகு 7. வெறிநாய்கள் போன்றவிலங்குகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.
நானே நல் மேய்ப்பன்:

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.