மேலான கிறித்தவ அழைப்பு. (113)(Higher Christian Calling.) ஒழுக்கம், ஒப்புரவாகுதல். Discipline, Reconciliation. மத்தேயு 5:21-26. First Friday. 16-2-2024.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறித்துவின் அன்பர்களே! உங்கள் அனைவருக் கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இயேசு கிறித்துவின் அமைதி உங்கள் அனைவருக்கும் உரித்தாகுக. லெந்து காலத்தின் முதல் வெள்ளியின் அருட் பொழிவு மத்தேயு நற்செய்தியின் 5,6,7 அத்தியாயங்களை கொண்ட மலைப் பொழிவாகும். ஆண்ட வரின் மலைப்பொழிவு என்பதுபழைய ஏற்பாட்டில் மோசே அவர்கள் சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளை களையும், நியாப் பிரமானங் களையும் கடவுளின் விரலால் கல் பலகைகளில் எழுதியதை பெற்றுக் கொண்டார்.இதற்காக சீனாய் மலையில் மோசே 40 நாட்கள் கர்த்தருடன் இருந்தார். நமது ஆண்டவரின் மலைப் பொழிவு கலிலேயக் கடலின்
வட மேற்கு கரையில் உள்ள
மவுண்ட்ஆஃப் பீடிட்யூட்ஸ் மலையாகும். (The Mount of Beatitudes) உலக மக்கள் அனைவ
ருக்குமான அருட் பொழிவை
தருகிறார். இது கி.பி 30ம் ஆண்டு.
நமது தேச தந்தை மகாத்மா காந்திஅவர்களுக்கு பிடித்த பகுதி இந்த மலை பொழிவுதான்.இது மனிதநேயத்தின்அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் ஒழுக்க நெறி
களை வலியுறுத்துகிறது. இங்கு
விண்ணரசைப் பெற்றவர்கள் எட்டு வகையான வாழ்வுடைய மக்களே என குறிப்பிடுகிறார். ஏழையரின் உள்ளத்தோர்,
நீதியின்பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்க ளுக்குரியது. இவர்கள்தான்
இறையாட்சியைப் பெற்றவர்கள்.
இத்தகைய மேலான அழைப்பை
பெற இந்த லெந்து காலங்களில்
கடவுள் நம்மை அழைக்கிறார்.
இந்த அழைப்பு ஒழுக்கம், ஒப்புரவாகுதலின் அடிப்படையில்
அமைந்தது. The Divine Calling is based on Christian Discipline and Reconciliation.
1.ஒழுக்கம்: கிறித்துவத்தின் மேலான அழைப்பு. Higher Christian Calling is based on Discipline. மத்தேயு :5:21-26.
கிறித்துவின் அன்பர்களே! நமது அழைப்பு ஒழுக்கத்தின் அடிப் படையில் அமைந்துள்ளது. ஏனேனில், ஆண்டவரின் நாமங் களில் ஒன்று" இம்மானு வேல்". அவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் ஒழுக்கமாக
இருப்பது மிக அவசியமாகும். தூய பவுல் அடிகளார் நம் அழைப்பை;" நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங் கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். (2 தெசலோனிக்கர் 2:14) என கூறுகிறார். மிக முக்கியமாக, இறைபணியாற்ற
அழைக்கப்பட்டோர் ஒழுக்கத்தின்
அடிப்படையில் தான் பணியாற்ற
வேண்டும். ஆண்டவராகிய இயேச
கிறித்து "தம் சகோதரர் சகோத ரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியை யோ "முட்டாளே" என்பவர் தலை மைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநர கத்துக்கு ஆளாவார். (மத்தேயு நற்செய்தி 5:22) எனஎச்சரிக் கிறார். இது நம் சுய ஒழுக்கத்தை
வலியுறுத்துகிறது.(Self -discipline)
ஒரு நல்ல கிறிஸ்தவர்களின் அடையாளமே ஒழுக்கமாகும். மிக முக்கியமானது தனி மனித ஒழுக்கமாகும். ஒழுக்கம் இல்லா மல் கடவுளுக்கு ஏற்றவனாய் இருப்பது எவ்வாறு? கடவுள் நம்மை நேசிப்பாரா? ஒழுக்கம் ஒன்றே நம்மை கடவுளோடு இனைந்து செயல்பட வலிமை தரும். மிக முக்கியமானது லெந்து
காலங்கள் நம் ஒழுக்க கேடான
செயல்களை விட்டுவிடும் கால மாகும். நாம் கடவுளின் அன்பு
பிள்ளைகள், "கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய் வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயி ருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. (1 யோவான் 3:9), இந்த
2. ஒப்புரவாகுதல்: கிறித்துவத் தின் மேலான அழைப்பு. Higher Christian Calling is based on Reconciliation.
கிறித்துவின் பிரியமான சகோதரர்களே! "ஒப்பு"என்றால் சமம் என்று பொருள். ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். உலக நடையுடன் ஒத்து வாழ்தல், பகிர்ந்து உண்டு வாழ்தல் என்று பலபொருள்படும். ஒப்புரவு என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் கருத்துகள், அவரது சமதர்மக் கோட்பாட்டைக்குறிப்பிடுகிறது என்பர். இத்தகைய ஒப்புரவு எனும் இயல்பு உடையவர்களையே வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகிறார்.சான்றாண்மைப் பண்புகளில் ஒன்று ஒப்புரவு. கிறித்தவமும் அதை வலியுறத் துகிறது . Reconciliation is the act of causing two people or groups to become friendly again after an argument or disagreement. இதற்கு
சான்றாக என்னை மிகவும் கவர் ந்த பகுதி; ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப் போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, உன் கருவி களான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக் கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார். ஆனால் யாக்கோபு தன் தாயின் தவறான ஆலோசனைபடி; தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்றான். என தந்தையையும், தன் சகோதரனையும் ஏமாற்றியது துரோகமாகும். இப்படி துரோகம்
செய்த யாக்கோபை ஏசா அவனை
பார்த்த உடன் ஓடிச் சென்று, அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர். (தொடக்கநூல் 33:4)
தன்னை யாக்கோபுஏமாற்றினான்
என ஏசா நினைக்கவே இல்லை.
அன்பு சகலத்தையும் தாங்கும், அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சிகொள்ளாது;இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவி னையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர் நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பே
ஒப்புரவாதலின் அடையாள மாகும். கடவுளிடம் அன்பு செலுத் துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோத ரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவு ளிடம் அன்பு செலுத்த முடியாது.
(1 யோவான் 4:20) எனவே, என்
அன்பு நண்பர்களே! ஒழுக்கமும்
ஒப்புரவாகுதலும் கிறித்தவர்க ளின் அடையாளமாகும் . இதுவே இந்த லெந்து காலத்தின் கிறித் துவின் மேலான அழைப்பாகும். சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
(கலாத்தியர் 6:18)
Prof. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
" கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் கட்டளை. "
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment