Posts

Showing posts from February, 2025

லெந்து : மீட்புக்கான ஒரு காலம். (185)Lent : A time of Redemption. ஏசாயா: 58:1-4, திருப்பாடல் 6. உரோமையர் 2:1-13. யோவான் 5:1-9.

Image
முன்னுரை:  கிறித்துவுக்கு பிரியமானவர்களே! லெந்து என்ற தவக்காலம், பாவிகளின் திருநாளாகும். இந்நாள் பாவி களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட நாட்களாகும். இன்னாட்கள்,  ஆண் டவருடைய சிலுவைபாடுகளை நினைவு கொள்ளும் இவற்றில் கொஞ்சமாவது நாம் பங்கெடுக் கும் பாடுகளினால், தான தர்ம ங்கள், ஜெப விண்ணப்பங்கள், மன்றாட்டுக்கள், உன்னா நோன் புகள், பாடல்கள், ஆராதனைகள் என்று கிறித்துவின் பாடுகளின் நினைவிலே   வாழக் கூடிய திருநாளாகும். லெந்து சாம்பல் புதன் (Ash Wednesday) தொடங்கி கடைசி திருவிருந்து வியாழன் வரை அடங்கியுள்ள 40 நாட்கள் அடங்கியதாகும்.லெந்து என்பது ஈஸ்டருக்கானதயாரிப்பில் வழிபாட்டு ஆண்டில் புனிதமான கிறித்துவ மத அனுசரிப்பு ஆகும் . மத்தேயு , மாற்கு மற்றும் லூக்கா வின் நற்செய்திகளின்படி , இயேசு தனது பொது ஊழியத்தைத் தொட ங்குவதற்கு முன்பு யூதேயா பாலை வனத்தில் உண்ணாவிரதம் இருந் து சாத்தானால் சோதனையைத் தாங்கிக் கொண்ட 40 நாட்களை இது எதிரொலிக்கிறது. லெந்து நாட்களில்  ஞாயிற்று கிழமைகள் சேர்க் கப்படவில்லை. லெந்தின் அடிப்படையே,, "என்னைப் பின்ப ற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை...

படைப்புகளின் சீரழிவு.(184) The Corruption of Creation. ஏசாயா 5:1-13, திருப்பாடல் 8, கலாத்தியர் 1:5 -10, லூக்கா 10: 13- 16

Image
  முன்னுரை : கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்க   அனை வருக்கும்  இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.  இந்த வார தலைப்பாக நாம் சிந்திக்க இருப்பது,.  படைப்புக ளின் சீரழிவு.  சீரழிவு என்பது ஆங்கிலத்தில்  Deteriotion (அ) Corruption என கூறலாம். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத் தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படை த்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணு லகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவை கள், நிலத்தில் ஊர்ந்து உயிர்வாழ் வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். (தொடக்கநூல் 1:27,28) இப்படி ஆசிர்வாதமாக ஆரம்பிக்க ப்பட்ட இவ் உலகம், கடவுள் படை த்த ஏதேன் தோட்டத்தில் இந்த சீரழிவு முதல் பாவமான கீழ்படை யாமையால் பூமி கடவுளால் சபிக் கப்பட்டது.சாபம் முதலில் உலகில் வந்தது.(தொட. நூல்3:17) ஏன் இந்த சீரழிவு?  கடவுள் இவ்வு லகை படைக்கின்ற போது எல்லா ம் நல்லது என்று சொன்னார் அவர் பார்வையில் நன்றாக இருந்தது. ஆனால்,மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்...

".படைப்புகளிடைய கூட்டுச் சார்பு." (183) The Inter - Dependence in Creation. தொடக்க நூல்: 2:1-15.திருப் பாடல்: 104:24-35, கொலெசியர்: 2 : 16-23, மத்தேயு 13:1-9.

Image
முன்னுரை : கிறித்துவுக்கு பிரியமான அன்பர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்து க்கள். இவ்வார பிரசங்க தலைப்பு "படைப்புகளிடைய கூட்டுச் சார்பு." என்ற தலைப்பை சிந்திப் போம். படைப்புகளிடைய கூட்டுச் சார்பு."என்றால் என்ன? படைப்பு  அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது. எந்தப் படைப்பும் தனித்து இயங்காது, தனித்து இயங்க முடியாது என்பது, கடவுளின் கட்டளை. இது இயற் கையின் விதி. Interdependence in Creation is the Nature's law and divine' s form.படைப்பின் முதல் நாளைப் பாருங்கள். பூமி உருவமற்றதாக வும்  காலியாகவும் (shapeless and emptiness)  இருந்தது.  இருள் மற்றும் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே கடவுள் முதன்முதலாக ஒளியைப் படைத்தார். பின்னர், கடவுள் இருளையும் ஒளியையும் ஒரு சுழற்சியில் பிணைத்து, உருவாக் கினார். இருள் ஒளியை பகைக்க வில்லை, அவ்வாறே, ஒளி இருளை பகைக்கவில்லை. உருவ கமாகச் சொன்னால், இருளும் ஒளியும் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வருகின்றன. அவை ஒன்று க்கொன்று இடமளிக்கின்றன. ஒவ்வொரு நாளும், இருள் ஒளி  க்கு வழிவகுக்கிறது, பின்னர் ஒளி இருளுக்க...

நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.

கிறித்துவுக்கு பிரியமானவர்களே! அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். இவ்வாரம் நம் தென்னிந்திய திருச்சபை நலம் நல்கும் திருப் பணி ஞாயிறு  என மருத்துவ திருப்பணியை சிறப்பிக்கும் வகையில், " நோய்களை குண மாக்குதல்" . Healing in Sickness. என்ற நமது ஆண்டவரின் திருப் பணிகளில்ஒன்றான  குணப்படுத்தும் திருப்பணி தலைப்பை தியா னிப்போம்.நோய்களை குணமாக் குதல் ஆண்டவரின் திருப்பணி களில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அப்படி என்றால் முதலாவது திருப்பணி இறை ஆட்சியை இவ்வுலகில் கொண் டுவருவது என்ற மீட்பின் பணியா கும். ஆண்டவர் அன்புள்ளம் கொண்டவர். நோயினால் பாதிக்க ப்ட்டவர்களை கண்டதும் மன உருக்கம் கொண்டார். குணப் படுத்தினார்.செவிடர்களின் காது களைத் திறந்தார்,இறந்தவர்களை உயிர்ப்பித்தார். ஆரம்பகால திருச் சபைகள் ஆண்டவரை " தெய்வீக மருத்துவர்" என்ற பெயருடன் அழைத்தனர். நம் ஒத்தமை நற் செய்தி நூல்களில் ( Synoptic Gospels Matthew, Mark and Luke) 22 குணப்படுத்தும் பணிகளை ஆண்டவர் செய்திருக்கிறார். இவ ற்றில் பெண்களுக்காக 5 குணப் படுத்தும் நிகழ்வுகளும் உண்டு.(1) கானானிய பெண்ண...