முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.
உலகத்தில் எத்தனையோ மத ஸ்தாபகர்கள், ராஜாக்கள், நபிகள், புத்தர் இவர்களுடைய கல்லறை கள் எல்லாம் இன்றைக்கும் மூடியே இருக்கின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவின் கல்லறை மட்டும் திறந்தே இருக்கிறது.
1.இயேசு கிறிஸ்து உயிர்த்தெழ வில்லை நிலையில் என்ன நடந்திருக்கும்? What would have happened, if Jesus Christ did not rise?
அன்பானவர்களே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவில்லை எனில்:
1.கிறிஸ்துவம் இருந்திருக்காது.
2 கிறிஸ்தவம் ஒரு பொய்யான மார்க்கம்,or மதம் என்று அழைத் திருப்பர்
3 இயேசு கிறிஸ்து உயிர்த்தெழு வில்லையெனில் மரணத்தை ஜெயிக்க முடியும் என்ற நம்பிக் கை இருந்திருக்காது
4. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழு வில்லை எனில் அவர் தேவனு டைய குமாரன் என்று அழைக்க முடியாது
5 பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிச னங்கள் பொய்யாய் போயிரு க்கும்.உ.ம் "இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித் தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல் களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்." (எசாயா26:19) " "இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்;"-(தானியல் 12:2)
6. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவி ல்லையெனில் அவருடைய இரண் டாம் வருகையும் இருக்காது, நியாய தீர்ப்பும் நடக்காது.
7. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழ வில்லை எனில் தூய ஆவி நமக்கு அருளப்பட்டிருக்காது.
2. இயேசு கிறிஸ்து ஏன் மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்?𝚆𝚑𝚢 𝚍𝚒𝚍 𝙹𝚎𝚜𝚞𝚜 𝙲𝚑𝚛𝚒𝚜𝚝
𝚛𝚒𝚜𝚎 𝚘𝚗 𝚝𝚑𝚎 𝚝𝚑𝚒𝚛𝚍 𝚍𝚊𝚢?
அன்பானவர்களே ஏன் இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த் தெழ வேண்டும், அவர் உண்மை யிலேயே இறந்துவிட்டார் என்ப தை நிரூபிக்க மூன்று நாட்கள் போதுமான நேரத்தை விட அதிக மாகும்,
"ஏனெனில், என்னைப் பாதாளத்தி டம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர் (திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 16:10)இயேசுவின் உயிர்த்தெழுதல் அதே நாளிலோ அல்லது மறுநாளோ நடந்திருந் தால், அவர் உண்மையாகவே மரித்ததில்லை என்று வாதிடுவது அவருடைய எதிரிகளுக்கு எளிதா க இருந்திருக்கும். லாசருவின் உயிர்த்தெழுதல் சம்பவம் ஒரு உதாரணம். யாரும் அந்த அற்புத த்தை மறுக்க முடியாது (யோவான் 11:38-44).
யூத பாரம்பரியத்தின்படி, ஒரு நபரின் ஆன்மா/ஆவி அவரது இறந்த உடலுடன் மூன்று நாட்கள் இருக்கும் என்று நம்பினார்கள்.
இறைவாக்கினர் ஓசியா,
"தேவனால் இஸ்ரவேலின் உயிர்த் தெழுதல் மூன்றாம் நாளில் நடப்ப தாக பேசினார்.( ஓசியா 6:1-2)
மிக முக்கியமாக,"பெரிய மீனின் வயிற்றில் யோனாவின் மூன்று நாட்கள் அவருடைய உயிர்த்தெழு தலுக்கான உருவகமாக இயேசு குறிப்பிட்டார்.(யோனா 1:17 ).
இயேசு மூன்றாம் நாளில் உயிர்த் தெழுவேன் என்று தன்னுடைய நான்கு நற்செய்திகளிலும் அறிவி த்தார்.
3. நன்றி தெரிவிக்கும் தாவீது. David 𝚎𝚡𝚙𝚛𝚎𝚜𝚜𝚎𝚜 𝚑𝚒𝚜 𝙶𝚛𝚊𝚝𝚒𝚝𝚞𝚍𝚎. 𝟸 சாமுவேல் 22:1-20.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவளே இது தாவீதின் சங்கீத பாடல் 18 வது திருப்பாடலை மையமாகக் கொண்டது.தாவீது சென்ற இட மெல்லாம் கர்த்தர் அவரைப் பாதுகாத்தார் . அதனால், தனது முதுமையில், தாவீது மிகுந்த நன்றியுடன் திரும்பிப் பார்த்து, இந்தப் பாடலை மீண்டும் பாட முடிந்தது.தாவீது கர்த்தருடைய மீட்பை அனுபவித்தார் : தேவன் தாவீதை கோலியாத்திட மிருந் து விடுவித்தார்.தேவன் தாவீதை சவுலிடமிருந்து விடுவித்தார்.
தேவன் தாவீதை அப்சலோமிடமி ருந்து விடுவித்தார்.
ஆபத்து தாவீதை எல்லா பக்கங்க ளிலிருந்தும் சூழ்ந்தது - உடல் ரீதி யாக, ஆன்மீக ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, சமூக ரீதியாக - தாவீது கடவுளிடம் கூப்பிட்டபோது அவர் அழிவின் விளிம்பில் இருந்தார். இந்நிலையில்
தாவீது கடவுளிடம் கூப்பிட்டார், கடவுள் கேட்டார். தன்னுடைய வெற்றி,கடவுளின் கையால்தான் கிடைத்தது, அவருடைய சொந்த புத்திசாலித்தனம் அல்லது திறமையால் அல்ல என்பதை தாவீது அறிந்திருந்தார். ஆதரவாக கர்த்தர் இல்லாமல் , தாவீது வீழ்வார்.அவர் என்மேல் பிரியமாயிருந்தபடியால் என்னை விடுவித்தார்.” என நன்றி அறிதலோடு இந்த சங்கீதத்தை பாடுகிறார். கடவுள் தாவீதுக்கு அவருடைய வாழ்வில் எல்லைய ற்ற மாறுதலை தருகிறார்.
4.கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்த அனைவரும் உயிர்த் தெழுவர்.1.கொரிந்தியர் 15:20-28.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உயிர்த்தெழுந்த கிறிஸ்து "மறித்தவர்களின் முதற்பல னாக" இருக்கிறார் என்று பவுல் கூறும்போது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வெறும் ஆரம்பம் என்று அவர் இந்த கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் கூறுகிறார். அவருடைய உயிர்த்தெழுதல் வரவிருக்கும் ஏராளமானவரின் உயிர்த் தெழுதல்களைக் குறிக்கி றது - கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்த அனைவரும் உயிர்த்தெழு வர்.முதல் மனிதன் ஆதாம்,பாவம் செய்து இறந்து, பாவத்தையும் மரணத்தையும் உலகிற்குள் கொண்டு வந்தது போல - இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, உயிர்த்தெழுத லைக் கொண்டு வந்தார். மரணத் தை ஜெயித்தார்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெ ழுதலையும் நமது சொந்த உடல் உயிர்த்தெழுதலையும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுகிறார்.
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அது நமக்கு எதிர்காலம். எதிர்காலத்தில், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, அவிசுவாசிகளும் கூட உயிர்த்தெழுப்பப்பட்டு கிறிஸ்து வின் முன் நியாயத்தீர்ப்பில் நிற்பார்கள்.மனிதனால் மரணம் வந்ததால், மனிதனால் மரித்தோரி ன் உயிர்த்தெழுதலும் வந்தது. ஆதாமினால் எல்லாரும் மரிக்கி றது போல, கிறிஸ்துவினால் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படு வார்கள்.”என்பது உறுதி.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுலடிகளார் கூறியது போல கிறிஸ்து உயிரு டன் எழுப்பப் படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய் தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயி ருக்கும். (1 கொரிந்தியர் 15:14)
உயிர்த்தெழுதல் எந்த மாற்றத் தை நம்மில் உருவாக்கி இருக் கிறது என்பதை சிந்திப்போம்:
1.உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியும் வல்லமையும் தனிப்பட்ட முறை யில் வைத்திருக்க வேண்டிய அனுபவங்கள் அல்ல, மாறாக உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ப்பட வேண்டியவை
2.உயிர்த்தெழுதல், மரணத்தின் மீது கிறிஸ்துவின் வெற்றியின்நற்செய்தியைப் பரப்பவும், கல்லறையில் தேவதூதர் அறிவித்ததை எதிரொலிக்கவும் நாம் நியமிக்கப்பட்டுள்ளோம், "அவர் இங்கே இல்லை; அவர் உயிர்த்தெழுந்தார்!" (மத்தேயு 28:6).
3.நம்மைப் போலவே நம் அண்டை வீட்டாரை நேசிக்கவும், நம்மை காயப்படுத்துபவர்களை மன்னிக் கவும், நல்லிணக்கம் மற்றும் அமைதியின் பாலங்களை கட்ட வும் நாம் அழைக்கப்படுகிறோம்
4. திருச்சபை உயிர்த்த கிறிஸ் துவின் சரீரமாய் இருப்பதினால் அதனுடைய நற்செய்திப் பணி யில் பங்கு பெறுவது கட்டாயம் ஆகிறது.
5.நற்கருணையில்தான் நாம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஆழமான மற்றும் நெருக்கமான முறையில் சந்திக்கிறோம்.
6.உயிர்த்தெழுந்த மக்களாக வாழ்வது என்பது உயிர்த்தெழு தலின் சக்தி நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நல் மாற்றமடைய அனுமதிப்பதாகும்.
7.நாம் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தத்தைத் தொடர வேண் டும். இதன் பொருள் நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் சேவை வாழ்க்கை.
8.கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை, நமது உயிர்த்தெழு தல் வாழ்க்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருச்சபையின் வழிபாட்டு வாழ்க்கையில், குறிப்பாக தெய்வீக வழிபாட்டில் பங்கேற்ப து அவசியம்.
9.உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியும் வல்லமையும் தனிப்பட்ட முறையி ல் வைத்திருக்க வேண்டிய அனுப வங்கள் அல்ல, மாறாக உலகத் துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை.
10.உண்மையான நற்செய்திபணி நம்மை சுற்றியுள்ளவர்களுடன் உயிர்த்தெழுதலின் நற்செய்தி யைப் பகிர்ந்து கொள்வதாகும்.
11.கிறிஸ்து உயிருடன் இருக் கிறார், அவருடைய மக்கள் மூலம் செயல்படுகிறார் என்பதற்கு சேவை உலகிற்கு ஒரு சக்திவா ய்ந்த சான்றாகும்.
12. உயிர்த்து எழுதல் கிறிஸ்தவ ர்களின் கொண்டாட்டமாகும். அது அனுதினமும் கொண்டாடப் பட வேண்டும்.
6.யார் நமக்காக கல்லை புரட்டுவார்.Who will roll the stone for us?மாற்கு 16: 1-11.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே!
இயேசுவின் உடலுக்கு கடைசியா க சேவை செய்ய நேரம்இல்லை. மகதலா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோ மேயும் அவருடைய சரீரத்தில் பூசும்படி நறுமணப் பொருட்களை வாங்கினார்கள். இந்தப் பெண் களில் பெரும்பாலோர் கலிலே யாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் குறுக்கிட்டதால், உடலில் அபிஷேகம் செய்ய விரும்பிய பெண்களால் அதைச் செய்ய முடியவில்லை. ஓய்வுநாள் முடிந்தவுடன், முடிந்த வரை சீக்கி ரமாக, அவர்கள் இந்த சோகமான பணியைச் செய்யத் தொடங்கி னர்.
கல்லறைகளுக்கு கதவுகள் இல்லை. கதவு என்ற வார்த்தை குறிப்பிடப்படும்போது அது உண் மையில் திறப்பு என்று பொருள். திறப்புக்கு முன்னால் ஒரு பள்ளம் இருந்தது, அந்தப் பள்ளத்தில் ஒரு வண்டிச் சக்கரம் போன்ற பெரிய வட்டக்கல் ஓடியது; அப்படி ஒரு கல்லை நகர்த்துவது தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை பெண்கள் அறிந்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் கல்லறையை அடைந்ததும், கல் உருட்டப்பட்டது,
அந்தக் கல் மிகப் பெரியதாகவும் அசையாமலும் இருந்தது மட்டுமல் லாமல், அது ஒரு அதிகாரப்பூர்வ முத்திரையால் மூடப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அத்தகைய முத் திரையை உடைப்பது ஒரு கடுமை யான குற்றமாகும். அவர்களின் கவலைகளை மேலும் அதிகரிக்க, கல்லறை வீரர்களால் பாதுகாக்க ப்பட்டது. அவர்கள் பயந்திருந்தா லும், அத்தகைய காரியத்தை முயற்சித்த சில துணிச்சலான பெண்கள் இவர்கள் என்று நாம் இடைநிறுத்த வேண்டும். உள்ளே இயேசு மரித்தோரிலிருந்து உயிர் த் தெழுந்தார் என்ற நம்பமுடியாத செய்தியை அவர்களுக்குக் கொடு த்த ஒரு தூதர் இருந்தார். தூதர் கள் கல்லை புரட்டி இருந்தார்கள்.
மத்தேயு 28:2-4 கூறுகிறது: “ ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட் டது, ஏனென்றால் கர்த்தருடைய தூதன் பரலோகத்திலிருந்து இறங்கி, கல்லறைக்குச் சென்று, கல்லைப் புரட்டி அதன் மீது அமர் ந்தார். அவருடைய தோற்றம் மின் னல் போல இருந்தது, அவருடைய உடைகள் பனியைப் போல வெண் மையாக இருந்தன. காவலர்கள் அவரைப் பார்த்து மிகவும் பயந்து, அவர்கள் நடுங்கி, இறந்தவர் களைப் போல ஆனார்கள்.” பயந்த பெண்களுக்குத் தெரியாமல், கடவுள் ஏற்கனவே அவர்களின் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டார். நாம் நம் கடவுளைச் சேவிக்கும்போது, நமக்குத் தெரி யாமல், அவர் பெரும்பாலும் நம் கவலைகளை மகிமையுடன் கவனித்துக் கொண்டார்.அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபோது, வெள்ளை அங்கி தரித்த ஒரு இளைஞன் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவர்கள் பதற்றமடைந்தார்கள். 'பயப்படாதே' என்று அவர் கூறி னார். 'சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவை நீங்க ள் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்தெ ழுந்தார் அவர் இங்கேஇல்லை. அவரை வைத்த இடத்தைப் பாருங்கள்'".
உயிர்த்தெழுதலின் சிறந்த சான்று கிறிஸ்தவ திருச்சபையின் பிரசன்னம். சோகமான மற்றும் விரக்தியடைந்த ஆண்களையும் பெண்களையும் மகிழ்ச்சியால் பிரகாசிக்கும் மற்றும் தைரியத்தா ல் சுடர் விடும் மக்களாக வேறு எதுவும் மாற்றியிருக்க முடியாது. .
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலின் வல்ல மைக்கு முன்னே, பெரிய பிரச்னை கள் என்றோ, சிறிய பிரச்னைகள் என்றோ கிடையாது. அவரை நோக்கி உங்கள் கண்களை ஏறெ டுத்துப் பாருங்கள். அந்த பார மான, மிகவும் பெரியதான கல் புரட்டப்பட்டு இருப்பதைப் பார்ப்பீர்கள்.
7. உயிர்த்த கிறிஸ்து யார்? Who was the risen Christ?
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே உயிர்த்த கிறிஸ்து ஒரு உயர்வான நபர் உயிருள்ள நபர்.
(i) இயேசு ஒரு புத்தகத்தில் வரும் ஒரு நபர் அல்ல, ஆனால் ஒரு உயிருள்ள இருப்பு(presence).. வேறு எந்த சிறந்த வரலாற்று நபரின் வாழ்க் கையைப் போல இயேசுவின் கதையைப் படிப்பது போதாது. நாம் அப்படித் தொடங் கலாம், ஆனால் அவரைச் சந்திப் பதன் மூலம் முடிக்க வேண்டும்.
(ii) இயேசு ஒரு நினைவு அல்ல, ஆனால் ஒரு இருப்பு.(presence). மிகவும் அன்பான நினைவு மறை ந்துவிடுகிறது
iii) கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இயேசுவைப் பற்றி அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கை அல்ல, மாறாக இயேசுவைஅறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கை.
*உயிர்த்தெழுதல், இயேசுகிறித்து
தேவ குமாரன் (Son of God) என்பதை உறுதி செய்கிறது.
* இயேசுகிறித்து மரணத்தை
வென்றார் என்பதை நிருபித்தார்.
* இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
அனைவரின் பாவங்களை நீக்கி
இரட்சிக்கிறது.
* இயேசுவின் உயிர்த்தெழுதல்,
மரணத்திற்குபிறகான வாழ்வை
உறுதியளிக்கிறது.
நண்பர்களே நம்முடைய பயணம் கையிலயாவை நோக்கி இருக்கட்டும் அங்கு மீண்டும் உயிர் கிருத்துவை சந்திப்போம்.
கலிலேயா என்பது எருசலேமின் எதிர்ப்பதம். கலிலேயா இயேசு வின் பணித் தொடக்கம். அங்கேதான் திருத்தூதர்களை இயேசு அழைத்தார். தங்கள் தலைவரின் இறுதியைக் கண்டு பயந்து போய்க் கிடந்த திருத்தூதர்களை மீண்டும் தொடக்கத்துக்கு அழைத்துச் செல்கின்றார் இயேசு. நம்மையும் அவர் அழைத்து வழிநடத்துவாராக ஆமென்.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment