உலக உழைப்பாளர் தினம். தச்சர் யோசேப்பு (206). தொடக்க நூல் 1: 26- 2:3.திருப்பாடல்15.2,தெசலோனிக்கர் 3:6-15, யோவான் 5: 1-10
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் உயிர்த்த கிறிஸ் துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் மே 1 உலக உழைப்பாளர் தினம். இந் நன்நாளில் திருவிவிலியத் தின் அடிப்படையில் நாம் தியானி க்க இருக்கின்ற தலைப்பு தச்சர்யோசேப்பு.ஒரு தொழிலாளி.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்ப டுகிறது. இது தொழிலாளர்களை யும், தொழிலாளர்களின் உரிமைக ளையும் நினைவுகூறும் நாளா கும். அமெரிக்காவில் தொழிலா ளர்கள் 8 மணி நேர வேலை கோரி போராடியதன் நினைவாக மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. 1889-ல் நடந்த சோசலிஸ்ட் மாநாட்டில் தொழிலா ளர்களுக்கான 8 மணிநேரவேலை நாள் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.1890-ல் மே 1 அன்று முதல் தொழிலாளர் தினம் கொண்டா டப்பட்டது. யோசுப்பு உழைக்கும் மக்களின் தொழிலாளர் அவர் ஒரு தச்சர். நேர்மையாளர் நீதிமான். ரோமானிய மாகாணமான கலிலே யாவில் உள்ள நாசரேத் நகரில் வசித்து வந்தார்.அவர் அகஸ்டஸ் சீசரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந் தார் . அவர் யூதாவின் எபிரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர் , தாவீது ராஜாவின் வம்சாவளி யைச் சேர்ந்தவர் . அதே கோத்தி ரத்தைச் சேர்ந்த மரியாளை மணந்தார் .யோசேப்பு என்ற பெயர் எபிரேய மொழியில் இருந்து வந்தது இதன் பொருள் "அவர் அதிகரிக்கிறார்" அல்லது " கர்த்தர் அதிகரிக்கிறார்". இது முதலில் யாக்கோபின் முதல் மகனுக்காக ராகேல் பயன்படுத் தப்பட்டது, அவளுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக் கையில். அசல் யோசேப்பு தனது மக்களின் இரட்சிப்பில் கருவியாக இருப்பார். இந்தப் பெயர் இசக் கார் மற்றும் லேவி (யோசேப்பின் மகன்கள்) ஆகிய கோத்திரங்க ளிலும், வடக்கு இராச்சியத்தின் இரண்டு பெரிய கோத்திரங்க ளின்கூட்டாகவும்காணப்படுகிறது.
மரியாளுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு, அவள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபி டித்து, அவளை திருமண ஒப்பந்த த்தில் இரகசியமாக விவாகரத்து செய்யத் திட்டமிட்டார். ஆனால் இறைத்தூதர் யோசப்பிடம், அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரி டுவீர். ஏனெனில் அவர் தம் மக்க ளை அவர்களுடைய பாவங்களி லிருந்து மீட்பார்"; என்றார்.இதன்
பிறகு, பூமிக்குரிய தந்தையாக இருக்கும் கடமையை அவர் பணிவுடன் ஏற்றுக்கொண்டார்
யோசேப் ஒரு நீதிமான் :
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே யோசேப்பு ஒரு உறுதியான நம்பிக்கை கொண்ட மனிதர் . (மத்தேயு 1:19) அவரை ஒரு நீதிமான் என்று விவரிக்கிறது, அதாவது அவர் மோசேயின் நியாயப்பிரமான சட்டத்திற்கு உண்மையுள்ளவர். யோசேப்பு சரியானதைச் செய்தார். அவர் ஒரு மரியாதைக்குரிய, தெய்வீக மனிதர். அவர் என்ன சாப்பிட்டார், யாருடன் பழகினார், ஓய்வுநாளை எப்படிக் கழித்தார் என்பதில்கவன மாக இருந்த யோசேப்பு, தன்னை ஆன்மீக ரீதியில் தடம் புரளச் செய் யும் எதிலிருந்தும் விலகி இருந் தார்.எல்லா சிறந்த தலைவர்க ளுக்கும் அடித்தளமாக அமைவது உறுதியான நம்பிக்கை, எளிதான தை விட சரியானதைச் செய்வது. யாரும் கவனிக்காத நேரங்கள் உண்மையான குணம் வெளிப்ப டும் என்பதை அறிந்து, ஒரு வலி மையான தலைவர் உறுதியான பழக்கத்தை வளர்த்துக் கொள் கிறார். சிறந்த தலைவர்கள் தங் கள் நற்பெயர்கள், மனசாட்சி மற்றும் மதிப்புகளைப் பாதுகாத் துபொக்கிஷமாகப் போற்றுகிறார் கள்.மரியாள் தான் கர்ப்பமாக இருப்பதாக யோசேப்புக்குச் சொன்னபோது அவர் எப்படி உணர்ந்தார் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். அவர் அந்த இறை குழந்தைக்கு தந்தை இல்லை அவர் வளர்ப்பு தந்தை. யோசேப்பின் நற்பெயர் ஆபத்தில் இருந்தது. நாசரேத்தில் உள்ள சிறிய நகர வதந்திகள் ஊகங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் மறைமுகமான பேச்சுகளா ல் சூழப்பட்டன. இந்த உறுதியான நம்பிக்கை கொண்ட மனிதன்
ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ள நீதிமான். அவர் மோசேயின் சட்டம் மரியாளை நகர வாசல்களுக்கு அழைத்துச் சென்று கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று கூறியது (இணை சட்டம்.உபாகமம் 22:24).அவளுடைய வருங்காலக் கணவர், நீதிமானாக இருந்ததால், அவளைப் பொதுவில் அவமானப் படுத்தாதபடி, ரகசியமாக நிச்சய தார்த்தத்தை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்." யோசேப்பு மரியாளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அவளுடைய
குடும்பத்தினரிடமிருந்து அதிக பணம் வசூலித்து, அவளைப் பொதுவில் அவமானப்படுத் தியிருக்கலாம். அவ்வாறு செய்ய அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இருந்தது, ஆனால் அவர் அவளை நேசித்ததால், இரண்டு சாட்சிக ளைக் கண்டுபிடித்து அவர்களின் உறவை தனிப்பட்ட முறையில் முறித்துக் கொள்ளத் திட்டமிட்டார், இது மரியாளின் அவமானத்தைக் குறைத்தது, மரியாள், இயேசுவின் தாய் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ திருச்சபையின் தாயாகவும் கருதப்படுகிறார்.
யோசேப் உறுதியான மனிதர்
அன்பானவர்களே யோசேப் கடவுளின் வாக்கு மீது உறுதியாக இருந்தார் மரியாளை முழுமையா க நம்பினார்.அவர்களுக்கு பேரின்ப கனவுகளும் எதிர்காலத் திற்கான பரலோகத் திட்டங்களும்
இருந்தன. அவருக்குத் தெரியும். யோசேப்பும் மரியாளும் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவி ல்லை. தனது கனவுகளின் பெண் ணை மணந்து ஒரு குடும்பம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப் பு அவரைச் சுற்றி நொறுங்கியது.
இப்போது, அவர் ஒரு வருங்கால மனைவி கர்ப்பமாக இருக்கிறார், என்ன செய்ய வேண்டும்? யோசேப்பு உறுதியான நம்பிக்கை கொண்ட மனிதன்.
அவர் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய மரியாதைக்குரியவர் .யோசேப்பு இரக்கமுள்ள மனிதர் . மத்தேயு 1:19 (NLT) கூறுகிறது, " நீதிமான் என்ற யோசேப்பின் நல்ல பெயரை மீட்டெடுக்கத் திட்டமிட்டார். யோசேப்பு அன்பான காரியத்தைச் செய்ய முயன்று கொண்டிருந்த அதே நேரத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். எல்லாவற்றையும் விரைவாகவும் அமைதியாகவும் செய்யத் திட்டமி ட்டார். யோசேப்பு ஒரு உறுதியான மனிதர், ஆனால் அவர் இரக்க முள்ள மனிதரும் கூட. ஒரு தெளி வான மனிதராக மாற்றியது . ஒரே இரவில் குழப்பம் மற்றும் குழப்பத் தின் மிகப்பெரிய புதிராக இருந்த விசயம் தெள்ளத் தெளிவாகியது. மரியாள் பொய் சொல்லவில்லை. அவள் தனது தேவதூத வருகை மற்றும் பரிசுத்த ஆவியுடனான சந்திப்பு பற்றிய உண்மையைப் பேசினாள். தீர்க்கதரிசனம் நிறை வேறிக்கொண்டிருந்தது. இது வரை கொடுக்கப்பட்ட மிகப் பெரிய பரிசான கடவுளின் குமார னும் நமது இரட்சகருமான கர்த்த ராகிய இயேசு கிறிஸ்துவின் சொல்லமுடியாத பரிசை வழிநடத் துவதில் யோசேப்பும் மரியாளும் கடவுளின் கருவிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.தான் வளர்க் கும் மகனுக்குத் தனது தொழிலை க் கற்பிப்பது ஒரு தந்தையின் இயல்பான பொறுப்பாகும். "தாவீதின் மகன்" என்ற பட்டத் தைத் தவிர, இயேசு யோசேப்பிட மிருந்து "தச்சரின்மகன்" என்ற பட்டத்தையும் பெறுகிறார், "இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவரு டைய சகோதரர் அல்லவா? (மத்தேயு நற்செய்தி 13:55)
யோசேப்பு விருத்தசேதனம் மற்று ம் குழந்தையின் அர்ப்பணிப்பு தொடர்பான மோசே சட்டத்தைப் பின்பற் றினார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் அவரது சட்டப்பூர்வ தந்தையானார்.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
(லூக்கா நற்செய்தி 2:21)
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண் டு சென்றார்கள். ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப் படும்" என்று அவருடைய திருச்ச ட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட் டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிரு ந்தது. ஏழைகளின் பரிசாகும்.
யோசுப்பு பெத்லகேமில் குடியிருத்தல்.
சிறிது காலத்திற்குப் பிறகு, யோசேப்பு பெத்லகேமில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தார். அந்த வீட்டிற்குத்தான் வெளிநாட்டு பிரமுகர்கள், பாபிலோனிலிருந்து வான ஆராய்ச்சி அறிஞ்சர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், "யூதர்களின் ராஜா" என்று அறிவித்தவரைப் பார்க்க வந்தார்கள். இந்த மனிதர்கள் முதலில் ஏரோதின் அரண்மனைக் குச் சென்றதால் , குழந்தையைக் கொல்ல ஒரு திட்டம் தீட்டப்பட்டது. மற்றொரு கனவில் எச்சரிக்கப்ப ட்ட யோசேப்பு, மரியாளையும் இயேசுவையும் எகிப்துக்குப் பாது காப்பாக அழைத்துச் சென்றார். சுமார் 65 கிம் (40 மைல்). ஏரோது இறந்த பிறகுதான் குடும்பம் நாசரேத்துக்குத் திரும்பியது.
இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, வருடா ந்திர பாஸ்கா பண்டிகைகளுக் காக யோசேப்பு அவரை எருசலே முக்கு அழைத்து வந்தார் . அந்தப் சிறுவன் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் இருப்பதாக நினைத்து, அவரும் மரியாளும் அவரை பல நாட்கள் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்று, தங்கள் மகன் இறையியலாளர் களுடன் பேசிக் கொண்டிருப்ப தைக் கண்டனர். இயேசு தனது தந்தையின் வேலையைச் செய் வது பற்றிப் பேசினார், மேலும் அவர் கோவிலில் தச்சு வேலை செய்யவில்லை என்பதை யோசேப்பு பார்க்க முடிந்தது.
இயேசு தனது பொது ஊழியத் தைத் தொடங்குவதற்கு முன்பே யோசேப்பு இறந்துவிட்டிருக்க லாம்.
மோசேவும் யோசேப்பும்.
குழந்தை இயேசு எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றிய மத்தேயுவின் நற்செய்தி யுடன் ஒத்துப்போகிறது, அங்கு அவர் பழைய ஏற்பாட்டு மோசேயு டன் ஒப்பிடப்படுகிறார்.
குழந்தை இயேசு எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றிய மத்தேயுவின் கதையுடன் ஒத்துப்போகிறது, அங்கு அவர் பழைய ஏற்பாட்டு மோசேயுடன் ஒப்பிடப்படுகிறார். யாக்கோபின் 11வது இளைய மகனாகிய யோசேப்பு ஒரு கனவு காண்பவர் மட்டுமல்ல கனவுகளை விளக்க வும் செய்யும் ஆற்றல் பெற்றவர். ஆனால் இயேசுவின் தந்தை யாகிய யோசேப்பு கனவு காண் கின்றவர் இறைத்தூதன் அவரிடம் கணவில் பேசினார்.யாக்கோபின் மகன் யோசேப்பு எவ்வாறு எகிப் திற்கு சென்றாரோ, அவ்வாறே இயேசுவின் தந்தையும் எகிப்துக் கு சென்றார். முற்பிதாவான
ஆபிரகாம் தன் மனைவி சாராளு டன் பஞ்சம் போக்க கானானிலி ருந்து எகிப்து சென்றார். செல்வத் துடன் மீண்டும் கானான் வந்தார்.
யோசேப்பு குழந்தையின் உயிரை
காப்பாற்ற எகிப்து சென்றார்
பின்பு நலமுடன் நாசரேத் வந்தார்.
எகிப்து வந்தாரை வாழவைக்கும்
பொன்நாடு.
யோசுப்பு ஒரு சிறந்த தந்தை.
அன்பானவர்களே இயேசுவை வளர்ப்பதில் யோசேப்பினுடைய வழிநடத்துதல் ஒரு தலைச்சிறந்த , அன்பு நிறைந்த, தந்தையாக தன் இறைமைந்தன் எருசலேம் பாஸ் காவில் காணாமல் போன போது.
பதறினார், துடித்தார்தன்மனைவி மரியாளுடன் ஊரெல்லாம் தேடி னார், உறவினர்கள் வீட்டிலும் தேடினார் மூன்று நாள்களுக்குப் பின் இறுதியில் எருசலேமுக்கு சென்று தேவாலயத்தில் தேடினா ர்கள்.அவரைக் கோவிலில் கண் டார்கள். அங்கே அவர் போதகர் கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
திருவள்ளுவரின் வாக்குப்படி "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்". தந்தை மகனுக்குனுக் குச் செய்யும் நன்மையாவது, கற்றோர்கள் கூடும் இடத்தில் அவனைக் மற்றவர்களிலும் மேன்மையுடையவனாகவும், அறிவுடையவனாகவும் ஆக்குதல் ஆகும். இதையே யோசேப் சிறப் புடன் செய்தார். தன் மகனை ஞானத்திலும் உடல் வளர்ச்சியி லும் மிகுந்து கடவுளுக்கும் மனித ருக்கும் உகந்தவராய் வாழ வைத் தார். (லூக்கா 2:52)
யோசேப்பின் மரணம் :
வேதத்தின் அடிப்படையில் யோசேப்பின் மரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. நான்கு நற்செய்தி நூல்களிலும் அவரின் ஊழிய கால மூன்று வருட பயண த்தில் யோசேப்பு இயேசுவின் சந்திப்பு அல்லது உறவோ குறிப் பிடப்படவில்லை. இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
(லூக்கா நற்செய்தி 8:19) இங்கு தந்தையை குறித்து நற்செய்தி யாளர் ஒன்றும் கூறவில்லை
எனவே, அவர் ஆண்டவரின் ஊழிய காலத்திற்கு முன் மரித் திருக்கலாம். முக்கியமாக சிலுவை பாடுகளுக்கு முன்பாக மரித்திருக்க வேண்டும்.
பிரியமானவர்களே யோசேப்பு போல உத்தமனும், நீதிமானமாய் நாம் இருக்க கடவுள் நமக்கு அருள் புரிவாராக
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment