Posts

Showing posts from September, 2025

முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும்.(228). Caring and Accepting the Elderly. தொடக்க நூல்: 46: 28-34, திருப்பாடல் : 21, 1.தீமொத்தேயு 5: 1-10, :லூக்கா 2: 25-35 முதியோர் ஞாயிறு Elderly Sunday

Image
  முன்னுரை :  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும். Caring and Accepting the Elderly.   அன்பானவர்களே யார் முதி யோர்? Who are the elderly? முதியவர்" என்ற சொல் "முதிய + அவர்" என்று பிரிக்கப்பட்டு, வயதில் மிகவும் முதிர்ந்தவரை அல்லது மூத்தவரைக் குறிக்கும்.  வயது அடிப்படையில் 60 அல் லது 65 வயதுக்கு மேல் முதியோ ர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்காக சர்வதேச முதி யோர் தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.  .முதியோர் என்பவர் வயதில் மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் பொதுவாக சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் நபர்களாவர். முதி யோரின் அனுபவங்களையும், அறிவையும் மதித்து, அவர்களு க்கு ஆதரவளிப்பது சமூகத்தின் கடமையாகும். இது அவர்களு க்கு மகிழ்ச்சியையும், மன நிம்ம தியையும் அளித்து, சமூகத்தில் அவர்களது பங்களிப்பை உறுதி செய்கிறது. " மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது ஔவையார் எழுதிய கொன்றை வேந்த...

கடவுளும் பல் சமய மக்களும் (227) God and People of all faith. ஆமோஸ் 9:1-12 திருப்பாடல் 66, உரோமையர் 2: 17-29 யோவான் 10: 14-18.

Image
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத் தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கடவுளும் பல் சமய மக்களும்  God and People of all faith. ' இறையியலில், ஒரு கடவுட் கொள்கை  (Monotheism) என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும். அவனே உலகைப் படைத்தவன். அவன் அனைத்து வகையான சக்திகளும் உடையவன். உலகி ன் அனைத்து செயல்களிலும் தன் சக்தியைச் செலுத்துபவன் கடவுள் இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மை யில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருப்பதை   திரித்துவம் (Trinity) என்று அழைக்கப்படுகிறது. நாம் கடவு ளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றோம்.  " என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (விடுதலைப் பயணம் 20:3)இது கடவுளின் கட்டளை ஒரே கடவுளை உறுதிப்படுத்துகி றது.  சமயம் என்பது கடவுள் நம்பிக் கையை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடாகும், மேலும் இந்த நம்பிக்கையும் அதன் சடங் குகளும் தனிமனிதர்களின் வாழ் க்கையில் முக்கிய பங்கை வகிக் கின்றன. பல்வேறு சமய மக்கள் வெவ்வேறு கடவுள்களை அல் லது ...

திருமணம்: நீடித்த காதல் (அன்பின்) வாழ்க்கை.(226) Marriage: Lasting life of Love. தொடக்க நூல் 2: 18-24, திருப்பாடல் 128, எபிரேயர் 13: 1-6, மத்தேயு 19: 3-9.

Image
முன்னுரை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, திருமணம்: நீடித்த காதல் (அன்பின்) வாழ்க்கை. Marriage: Lasting life of Love.  திருமணம் கடவுள் அமைத்து வைத்த மேடை என்பர்.ஆனால், திருவிவலியம், திருமணம் என் பது கடவுளின் சொந்தக் கையால் நெய்யப்பட்ட ஒரு புனித உடன் படிக்கை  என்கிறது.   இரண்டு உயிர்கள் ஒரே மாம்சமாக மாறும் ஒரு வாழ்நாள் ஒன்றிய ம் (Lifelong union), இது கிறிஸ்துவுக்கும் அவ ரது திருச் சபைக்கும் இடையிலா ன நித்திய அன்பைப் பிரதிபலிக் கிறது. மனித இதயங்கள் தடு மாறினாலும், இந்த தெய்வீக பிணைப்பு நம்மை தியாகத்துடன் நேசிக்க வும் , ஆழமாக மன்னி க் கவும், நம்பிக்கயை நிலைநிறு த்தவும், நீடித்த அன்பிற்கான கடவுளின் பார்வையைத் தழுவ வும் அழைக்கிறது. திருமணத்தை ஒரு சமூக ஒப்பந்த மாக (social contract) மட்டுமல்லா மல், தெய்வீக விருப்பம் மற்றும் கடவுளின் பிரதிபலிப்பாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சங்க காலத்தில், ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ் வாங்கு வாழ்வதே ...

கல்விப் பணி : திருச்சபையின் திருப்பணி(.225) Education as a Ministry of the Church. நெகேமியா 8:1-8, திருப்பாடல்கள் 119: 41-48, திருத்தூதர் பணிகள் 18: 24-28 மத்தேயு 5: 1-12. கல்வி ஞாயிறு.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, கல்விப் பணி : திருச்சபையின் திருப்பணி Education as a Ministry of the Church.  அன்பர்களே இந்தியாவில் அது வும் தமிழ்நாட்டில் முதன் முதலில் வந்த மிஷனரி என்ற அருட்பணி யாளர்  பார்த்தலோமியஸ் ஜீகன் பால்க் (Bartolomäus Ziegenbalg) (ஜூன் 24, 1683 - பிப்ரவரி 23, 1719) ஒரு ஜெர்மன் லூத்தரன் மிஷனரி மற்றும் இந்தியாவிற்கு முதல் மிஷனரி ஆவார். டென்மார்க்கின் நான்காம் பிரடெரிக் ஆதரவின் கீழ் அனுப் பப்பட்ட இவர், 1706 ஆம் ஆண்டில் ஹென்ரிச் ப்ளூட்சாவுடன் இணை ந்து டிரான்குபாரில் (இன்றைய தரங்கம்பாடி, தமிழ் நாடு) டேனிஷ்-ஹாலே மிஷனை நிறுவினார். இவர் 1714 ஆம் ஆண்டு விவிலிய த்தை தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து அச்சிட்டு, இந்தி யாவில் அச்சக முறையை அறிமு கப்படுத்தியவர்.தொழிலாளர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலை யையும் குழந்தைகள் இல்லத்தை யும் நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பல பள்ளிக் கூடங்களை நிறுவினார்." தமிழ் மொழியே எனக்கு தாய் மொழ...