Posts

Showing posts from November, 2025

தூய அந்திரேயர் திருநாள். இறை வருகையின் காலம், இறையருள்:தாழ்த்தப்பட்டோருக்கான நம்பிக்கை. (237) Grace of God: The hope for the Lowly. விடுதலைப் பயணம் 2: 1-10, திருப்பாடல் 30. 2.தெசலேனிக் கேயர்.2:13-16, லூக்கா 1:46-59.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார   ஞாயி றுக்கிழமை நாம் கொண்டாடப் போவது, " தூய அந்திரேயர் திருநாள். அதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," இறை வருகையின் காலம், இறையருள்:தாழ்த்தப்பட்டோருக்கான நம்பிக்கை. Grace of God: The hope for the Lowly.  இயேசு கிறிஸ்துவின் 12 திருத் தூதர்களில் ஒருவராகவும், திரு வசனத்தைப் பரப்புவதில் முக்கி ய பங்கு வகித்தவராகவும், அவர து சகோதரர் பேதுருவை ஆண்ட வரிடம் அழைத்துச் சென்றவரா கவும், ஆண்ட்ரூ, பிலீப்பை இயேசுவிடம் அறிமுகப்படுத்தி யவரகவும்,. கிரேக்கர்களை ஆண்டவரிடம் அழைத்துச் சென்றார். ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண் டு 5000 பேருக்கு உணவளிக்க  உதவிய சிறுவனை ஆண்டவரா கிய இயேசுவிடம் அழைத்துச் சென்றவராகிய சீடர்தான் அந்திரேயர். இவர் திருமுழு க்கு யோவானிடம் முதன் முதலாக சீடராக இருந்தார். திருமுழுக்கு யோவான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பார்த்து " " இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின்பாவத்தைப் போக் குபவர் .  (யோ...

வன்முறைச் சூழலில் அமைதி. (236)Peace in the contex of Violence. 1 சாமுவேல் 24: 1-12. திருப்பாடல் 52. உரோமையர் 12: 14-21.மத்தேயு 5: 38-45

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார   ஞாயி றுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," வன்முறைச் சூழலில் அமைதி. Peace in the context of Violence.   அன்பானவர்களே! வன்முறை சூழல் என்றால் என்ன? என்பதை சிந்திப்போம். வன்முறைச் சூழல் என்பது மற்ற வர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் ஒரு நிலைமை யாகும். இது உடல் ரீதியான தாக் குதல்கள், உளவியல் துன்புறுத் தல்கள், பாலியல் வன்முறை, அவமானப்படுத்துதல், அச்சுறுத் துதல், பொருளாதார ரீதியாக அடக்குதல், பின்தொடர்வது அல்லது ஒடுக்குவது போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப் படலாம். குடும்ப வன்முறை மற்b றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்றவை இதன் பொதுவான வகைகளாகும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுப்பதும் ஒடுக்குவது ம் அச்சுறுத்துவதும் வன்முறை தான். புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட் " (Romeo and Juliet, )நாடகத்தில், இரண்டு பகைமையான குடும்ப ங்களுக்கு இடையேயான வன்மு றைச் சூழல்த...

பெண் குழந்தையின் மதிப்பை உறுதி செய்தல் (235) Affirming the worth of the Girl Child.எண்ணிக்கை Numbers: 27: 1-11, திருப்பாடல் 71 : 1-12, திருத்தூதர் பணிகள் 21: 7-14, மாற்கு 5: 35-43.பெண் குழந்தைகள் ஞாயிறு The Girl - Child Sunday.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் பெண் குழந்தைகள் ஞாயிறு  அதன் தலைப்பாக நமக்குகொடு க்கப்பட்டிருப்பது," பெண் குழந் தையின் மதிப்பை உறுதி செய்தல். Affirming the worth of the Girl Child.  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருவிவிலியம், படைப் பில் ஆதாம் ஏவாளுக்கு காயின் ஆபேல் என்ற ஆண் குழந்தைக ளின் பெயர்கள் மட்டுமே குறிப் பிடப்பட்டிருக்கிறது  ஆனால் பெண் குழந்தைகள் பெயர்கள் இடம் பெறவில்லை.ஆனால், தொடக்க நூலில் 4 ஆம் அத்தி யாயத்தில் வெளிப்படையாகப் பெயரிடப் பட்ட முதல் பெண்கள்: லாமேக்கின் மனைவிகளான ஆதா மற்றும் சில்லா . (Adah and Zillah,)ஆவார்கள்.  பண்டைய சமூகத்தில் அதாவது தொடக்க நூல் காலத்தில் வம்சா வளி (Genealogies)ஆண் வழியாக க் கண்டறியப்பட்டது. அதுதந்தை வழி சமூகமாககும்.(Patrilineal society) இதன் முதன்மை நோக் கம், குறிப்பாக ஆதாம் முதல் நோவா வரையிலும், இஸ்ரவேல் மக்கள் வரையிலும், ஆணாதி க்க வம்சாவளியைக் கொண் டது.  இது பெண்களை மதிப்பி ழக்கச் செய்வதற்காக அல்ல, மாறாக அது வம்சாவளியைப...

திராட்சை செடியும் கொடிகளும். (234) Vine and Branches. எசேக்கியேல் : 37:15-23, திருப்பாடல்: 133, 1கொரிந்தியர் 12: 12-27, யோவான் 15:1-18. ஒன்றிப்பு ஞாயிறு.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம்  ஒன் றிப்பு ஞாயிறு (Unity Sunday)  அதன் தலைப்பாக நமக்குகொடு க்கப்பட்டிருப்பது,"  திராட்சை  செடியும் கொடிகளும். Vine and Branches. ". அன்பானவர்களே!  ஒன்றிப்பு  ஞாயிறு என்றால் என்ன? What is Unity Sunday?  ஒன்றிப்பு ஞாயிறு என்றால் கத்தோலிக்க வரலாற் றின்படி புனித பவுல் மனம் திரும்பிய நாளான கி. பி 37, ஜனவரி 25ஆம் தேதி, அதாவ து ஒன்றிப்பு வாரத்தின்இறுதி நாளை கொண்டாடுகிறார்கள்.(18 to 25) அந்நாளில் நாம் ஒருவருக்கொ ருவர் கூறுவதை மதிப்போம், கலந்துரையாடுவோம், மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப் போம் என்பதே அந்நாளின் மைய பொருளாகும். பவுலடியா ரின் மனமாற்றத்திற்குப் பிறகு தான் ஆண்டவரது நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொட ங்கியது, திருச்சபை இன்னும் அதிகமாக வலுப் பெற்றது.  அன்பர்களே! இறைவாக்கினர் ஏசாயா 5ம் அதிகாரத்தில் திரா ட்சைத் தோட்டத்தின் உவமை யை எடுத்துரைக்கிறார். கடவுள் தனது திராட்சைத் தோட் டத்தை (இஸ்ரேல் மக்கள் மற்றும் யூதாவையும...