Posts

Showing posts from December, 2025

முந்தையவற்றை நினைவில் கொள்ளாதீர்கள்,ஏசாயா 43:18-19

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனைவருக்கும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தையவற்றை நினைவில் கொள்ளாதீர்கள், பழையவற் றைச் சிந்திக்காதீர்கள்": என்பதே இவ்வாண்டின் வாக்குத்தத்தம். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனு க்கு சிறைப்பட்டுப் போன பின்பு, இறைவாக்கினர் ஏசாயா மூல மாக உரைத்த தீர்க்கதரிசனம்  பாபிலோனில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் சீயோனை நினைத்து அழுது  கடந்த கால பாவங்கள், தோல் விகள் அல்லது கடந்த கால அற்புதங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள், அது கடவுளின் எதிர்கால வேலை குறித்த உங்கள் எதிர் பார்ப்பை மட்டுப்படுத்தும் அளவி ற்கு இருக்கும்; கடந்த கால மனச் சோர்வை மறந்து விடுங்கள்.  "இதோ, நான் புதிய காரியத் தைச் செய்வேன், இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியமாட்டீர்களா?": கடவுள் முன்னெப்போதும் இல்லாத மீட்பு மற்றும் மறுசீரமைப்பு செயல் களை வாக்குறுதியளிக்கிறார், தம்முடைய மக்கள் விழிப்புடன் இருக்கவும், தம்முடைய புதிய வேலை தொடங்கும்போதே அதை அங்கீகரிக்கவும் வலியுறு த்துகிறார்.   "நான் வனாந்தரத்தில்...

குடும்பம் ஒரு வன்முறையற்ற சரணாலயம். (241)The family is a nonviolent sanctuary.தொடக்கநூல்: 50:15-21.கொலேசியர்: 3: 12-17.திருப்பாடல்: 133.லூக்கா: 15: 11-32.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார  ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " குடும்பம் ஒரு வன்முறை யற்ற சரணாலயம்" குடும்பம் என்பது கடவுள் வடிவமைத்த ஒரு அமைப்பு, அது சமுதாயத் தின் அடித்தளம். இது அன்பு, சமாதானம், பாதுகாப்பு, நிறை ந்த, தெய்வீகமான சரணால யமாகும், குடும்பம் என்பது தேவ ன் ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கி ஏற்படுத்திய முதல் அமைப்பாகும் , இது அவரது திட்டத்தின் ஒரு பகுதியாகும். நமது ஆண்டவர் இயேசு பிறந் ததே ஒரு குடும்பத்தில் தான்; குடும்ப உறுப்பினர்கள் ஒருவரு க்கொருவர் ஆதரவாகவும், விசுவாசத்தில் வளரவும், கடவு ளுடைய வழிகாட்டுதலுடன் அமைதியாக வாழ வேண்டிய இடம் இதுவே. குடும்ப வழிபாட் டின் மூலமும், கடவுளைப் பின் பற்றுவதன் மூலமும் விசுவாசம் வளர்க்கப்பட வேண்டும். குடும் பம் தேவனுடைய ஆசீர்வாதத் தின் மையமாக இருக்கிறது; ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் குடும்பம், தேவன் அவர்களை ஆசீர்வதித்து பெருகும்படி கட்ட ளையிட்டதைக் காட்டுகிறது.   குடும்பம் என்பது வன்முறைகள் இல்லாத, மன அமைதி நி...

இறை வருகையின் காலம். Advent. 4th Sunday.மாரநாத்தா : காத்திருப்பில் வாழ்வு. (240) Maranatha: Life in Waiting. ஏசாயா 2: 2-5, திருப்பாடல்: 27, திருவெளிப்பாடு : 22: 10-21, லூக்கா: 12: 32-40.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் நான்காம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, மாரநாத்தா : காத்திருப்பில் வாழ்வு.  Maranatha: Life in Waiting. இறைவருகையின் Advent நான்காம் ஞாயிறே இறுதியாகும். மாராநாத்தா என்றால் என்ன? What is Maranatha?.  அன்பானவர்களே! வில்லியம் பார்க்ளே (William Barclay) அவர்களின் விளக்கு உரையில்  மராநாதா" (மராநாதா)என்பது " எங்கள் ஆண்டவரே, வாருங் கள்!" அல்லது "வாருங்கள், கர்த்தராகிய இயேசுவே" என்று பொருள்படும் ஒரு சக்தி வாய்ந்த இயேசு பேசிய மொழி யான அராமைக் சொற்றொடர் ஆகும், இது கிரேக்கம் அல்ல, ஆனால்  அராமைக் மொழி, ஆரம்பகால திருச்சபையில் அதன் பண்டைய வேர்களை வலியுறுத்துகிறது திருவிவலியத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத் தும் வார்த் தை .இது இயேசுவின் உடனடி வருகைக்காக ஆரம்பகால கிறிஸ்தவர்களின் தீவிரமான, அவசரமான விண்ணப்பம் மற்றும் எதிர்பார்ப்பை வெளிப்ப டுத்துகிறது, இது ஆண்டவரது இரண்டாவது வருகைக்கான   பரோசியா (Parousia) என்ற கிர...

இறைவருகையின் காலம் மூன்றாம் ஞாயிறு. III Advent Sunday.அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை. (239) Deliverance From the Grip of fear. யோசுவா 1:1-9, திருப்பாடல் 27.1யோவான் 4: 13-21, மத்தேயு 1:18-25.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் மூன்றாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை".Deliverance From the Grip of fear. " கவியரசர் கண்ணதாசன், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமை யடா,ஆறிலும் சாவு நூறிலும் சாவு,தாயகம் காப்பது கடமை யடா" என அச்சத்தை குறித்து பாடி இருக்கிறார். திருவள்ளுவரும்,"அச்ச முடையா ர்க்கு அரணில்லை " என்கிறார். ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான  " தாமஸ் ஹார்டி. (Thomas Hardy,    புதின எழுத்தா ளர் மற்றும் கவிஞர். தன்,' எ லாவோடிசியன் " (A Laodicean) என்ற நாவலில், " பயம் தொலை நோக்கின் தாய்" Fear is the mother of foresight” என்ற மேற் கோளில், பயம் எதிர்கால ஆபத் துகள் அல்லது எதிர்மறையான விளைவுகளைப் பற்றிய கவலை பெரும்பாலும் நம்மை முன்கூட்டி யே திட்டமிடவும், பிரச்சினை களை எதிர்பார்க்கவும், அவற் றைத் தவிர்க்க ஞானத்தை வளர் க்கவும் தூண்டுகிறது, பயத்தை விவே...

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை  வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo.  நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை,  "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...