முந்தையவற்றை நினைவில் கொள்ளாதீர்கள்,ஏசாயா 43:18-19
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனைவருக்கும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தையவற்றை நினைவில் கொள்ளாதீர்கள், பழையவற் றைச் சிந்திக்காதீர்கள்": என்பதே இவ்வாண்டின் வாக்குத்தத்தம். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனு க்கு சிறைப்பட்டுப் போன பின்பு, இறைவாக்கினர் ஏசாயா மூல மாக உரைத்த தீர்க்கதரிசனம் பாபிலோனில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் சீயோனை நினைத்து அழுது கடந்த கால பாவங்கள், தோல் விகள் அல்லது கடந்த கால அற்புதங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள், அது கடவுளின் எதிர்கால வேலை குறித்த உங்கள் எதிர் பார்ப்பை மட்டுப்படுத்தும் அளவி ற்கு இருக்கும்; கடந்த கால மனச் சோர்வை மறந்து விடுங்கள். "இதோ, நான் புதிய காரியத் தைச் செய்வேன், இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியமாட்டீர்களா?": கடவுள் முன்னெப்போதும் இல்லாத மீட்பு மற்றும் மறுசீரமைப்பு செயல் களை வாக்குறுதியளிக்கிறார், தம்முடைய மக்கள் விழிப்புடன் இருக்கவும், தம்முடைய புதிய வேலை தொடங்கும்போதே அதை அங்கீகரிக்கவும் வலியுறு த்துகிறார். "நான் வனாந்தரத்தில்...