உயிர்த்த ஆண்டவரால் ஆற்றல் பெறல்.( 205) 𝙴𝚖𝚙𝚘𝚠𝚎𝚛𝚎𝚍 𝚋𝚢 𝚝𝚑𝚎 𝚁𝚒𝚜𝚎𝚗 𝙻𝚘𝚛𝚍. தொடக்க நூல் 28:10-22, திருப்பாடல் 29. திருத்தூதர் பணிகள் 20:7-12 யோவான் 20:11-18. உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உயிர்த்தெழு ந்த கிறிஸ்துவின் இனிய நாமத் தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிற்றுக் கிழமை தலைப்பாக கொடுக்கப் பட்டிருப்பது உயிர்த்த ஆண்ட வரால் ஆற்றல் பெறல். ஆற்றல் Empowered என்றால் என்ன? கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆற்றல் என்றால், ஒருவர் ஒரு செயலை செய்ய கொடுக்க ப்படும் அதிகாரம் or சக்தி அல்லது திறமை எனப்படும். உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் மூலம் அவரின் விண்ணரசை இவ்வுல கில் நாம் கொண்டு வருவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரமா கும். இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம், மனிதர்களுக்கு புதிய நம்பிக்கை, சக்தி, மற்றும் ஆவிக் குரிய புதுப்பிப்பித்தல் கிடைக் கிறது.இது கிறிஸ்தவ நம்பிக்கை யின் ஒரு மையக் கருத்தாகும். உயிர்த்த கிறித்து, தன் சீடர்களை ஓரிடத்தில் வர வழைத்து விண் ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் போய் அனைத்து மக்களினத் தையும் சீடராக்குங்கள் என்றார். சமத்துவ சமுதாயத்தை உருவா க்க, நான் உங்களுக்குக் கட்டளை யிட்டயாவற்றையும் மக்கள் கடைப் ...