Posts

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

Image
முன்னுரை :  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள்.இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " சீடராக் குங்கள்". யார் சீடர்? ஒரு சீடர் என்பது ஒரு ஆசிரியரின் போதனைகளை ஏற்று நடப்பவர், அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர். ஒரு மாணவர் அல்லது கற்றுக் கொள் ளும் எவரையும் சீடர் என்று குறிப் பிடலாம். இயேசுவின் போதனை களை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவருமே சீடர்கள்தான். ஒரு தலைவரின் போதனையை அறிவிக்காமல் யாரும் சீடராய் இருக்க முடியாது.சீடர் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் அவரது வழிகாட்டுதலின் படி வாழ்பவர் என்று பொருள். சீடர்கள் 12 பேரும் இயேசுவுடன் நெருக்கமாகப் பழகி, அவரது போதனைகளை உலகெங்கும் பரப்பினார்கள். சீடராக்குங்கள்  என்பது இயேசு வின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் அவரது சீடர்களாக மாற்றுவதைக் குறிக்கிறது. சீடர் என்ற சொல், ஒழுக்கம் போன்றது, லத்தீன் வார்த்தையான டிசிபுலஸிலிருந்து disciplus வந்தது, அதாவது "மாணவர்...

கிறிஸ்துகொண்ட இளைஞரின் செயல் வீரியம் (214) Youth with Christ in Action. தானியேல் 1:1-17, திருப்பாடல் 98, திருத்தூதர் பணிகள் 6:1-7, யோவான் 1:35-42. (இளையோர் ஞாயிறு ) Youth Sunday

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.  இவ்வாரம் திருச்சபைகள் இளை யோர் ஞாயிற்றை கொண்டாடுகி றார்கள். இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது  "கிறிஸ்துகொண்ட இளைஞ ரின் செயல் வீரியம்"  நமது திருவிவலியம் இளமைப் பருவத் தை ஆபத்து மற்றும் சவால்கள் நிறைந்த காலமாகக் குறிப்பிடு கிறது. "ஏனெனில் மனிதரின் இதயச்சிந்தனை இளமையிலிரு   ந்தேதீமையைஉருவாக்குகின்றது.( தொடக்கநூல் 8:21)என்கிறது.  மேலும் திருத்தூதர்  பவுல் அடிக ளார் இளைஞ்சர் தீமோத்தேயுவை “இளமையின் இச்சைகளை விட்டு விலகி ஓடுங்கள்” (2 தீமோ. 2:22) என்று அறிவுறுத்தினார். அப்பொழுது திமொத்தேயுவுக்கு வயது 20 முதல் 30க்குள் இருக்கும். குறிப்பாக, 1 தீமோத்தேயு 4:12, தீமோத்தேயுவை யாரும் தனது இளமையை இழிவாகக் கருத அனுமதிக்கக் கூடாது என்று ஊக்குவிகிறது, அதாவது அவர் ஒரு இளைஞராகக் கருதப்படும் அளவுக்கு இளமையாக இருந்தார், ஆனால் வழிநடத்தும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தார்.      யார் இளைஞர்? Who is the youth? இளைஞர்கள் என்பவர்கள்  ...

திரித்துவம்: அன்பின் குழுமம். (213) Trinity: Community of love.தொடக்க நூல் 18: 1-15, திரூப்பாடல் 97, 2 கொரிந்தியர் 13: 5-14, மாற்கு 1:1-11.திரித்துவ ஞாயிறு. Trinity Sunday.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள். திரித்துவ ஞாயிற்றின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட் டிருக்கும் தலைப்பு, திரித்துவம்: அன்பின் குழுமம். (Trinity: Comm unity of love) , "திரித்துவம் என்றால் என்ன? திரித்துவம் என்பது,  கிறிஸ்துவ இறையியலின்படி இறைத்தன்மையில் ஒருவராக வும், ஆள்த்தன்மையில் தந்தை , மகன் , தூய ஆவி என மூவரா கவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) எனப்படும்.இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியி டமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியி டமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும், மகனி டமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள் கள் அல்லர் . (These are three persons of one God and the three are not three gods.) இவ்வுலக அனைத் தையும் படைத்த ஒரே கடவுள் தமது இறைத்தன்மையில் ஒருவ ராகவும், ஆள்தன்மையில் மூவரா கவும் விளங்குகிற...

வாரும் தூய ஆவியாரே, எங்களை விடுவியும் (212) Come Holy Spirit, Set us free. ஏசாயா 61:1-11 திருப்பாடல்கள் 107:31-43, திருத் தூதர் பணிகள் 2: 1-13, லூக்கா 4:16-21.(பெந்தெகொஸ்தே ஞாயிறு ) Pentecostal Sunday.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனை வருக்கும்  மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள். இந்த வாரம் பெந்தகோஸ் தே ஞாயிறு இயேசு உயிர்த்தெழு ந்த 50-வது நாளை குறிக்கிறது.  இது கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாளாகும் தூய ஆவி யை ஆண்டவர் நமக்கு அருளாக கொடுத்து ஆவியின் வரங்களைக் கொடுக்கப்பட்டநாளாகும்.பெந்தெ கொஸ்தே" என்ற சொல், யூதர் களின் அறுவடை திருவிழாவைக் குறிக்கிறது. இது பாஸ்கா திருவிழாவிற்கு பின் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்பட்டது. இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத் தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்) தூய ஆவியின் வருகை யினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழா வே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது . விண்ணேற்ற விழாவுக்குப் Ascension  பின்  10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.. சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால்ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘ இயேசுவே ஆண்டவர் ’ எனச் சொல்ல முடியாது. எனத் த...

ஆணஂடவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம். (211) Fear of the Lord as the beginning of wisdom. 1 அரசர்கள் 3:3-14, திருப்பாடல் 14. 1 யோவான் 5: 13-21. லூக்கா 10: 21-24. மாணவர் ஞாயிறு.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இந்த வாரம் திருச்சபைகள் மாணவர் ஞாயிறை  கொண் டாடுகிறது. இதன் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது " ஆணஂடவ ரைப் பற்றிய அச்சமே ஞானத் தின் தொடக்கம்". மாணவர் ஞாயிறு, சர்வதேச அள வில் மாணவர்களுக்கான பிரார்த் தனை நாள் என்று அழைக்கப்படு கிறது, இது பழமையான உலகளா விய எக்குமெனிகல் ( கிறித்துவ ஐக்கியம்) பிரார்த்தனை நாட்களி ல் ஒன்றாகும் ,  ஆண்டவரைப் பற்றிய அச்சம் என்பது, கடவுள் மீதான மரியாதை, நம்பிக்கை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகும்.ஆண்டவரைப் பற்றிய அச்சம், வெறுமனே பயம் அல்ல, மாறாக கடவுள் மீதான மதிப்பும், அன்பும், மரியாதை ஆகும்.  திருப்பாடல் 19ல் கூறப்பட்டுள்ள வாறு, "ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது" என்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.ஆண்டவர் மீது அச்சம் கொள்வது தூய்மை வழிகளில் ஒன்றாகும்.  கடவுளுக்குப் பயந்து நடப்பதும் அவருடைய அதிகாரத்தை அங்கீ கரிப்பதும் ஞானத்தைப் பெறுவ தாகும்.கர்த்தரை அவரது வார்த் தையின் மூலம் அறிந்துகொள் வதே ஞானத்தைப் பெறுவதற் கான ஒரே வழி. அன்பானவர்களே!. 1அரசர்கள் க...

கிறிஸ்துவின் வழியில் அருட்பணி (210) Mission with Christ's Spirit. 2.அரசர்கள் 2: 9-16, திருப்பாடல் 105: 1-11, திருத்தூதர்பணிகள் 7:54-60, மத்தேயு 28:16-20.The fifth Sunday after Resurrection.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை யின் தலைப்பாக நமக்கு கொடு க்கப்பட்டிருப்பது கிறிஸ்துவின் வழியில் அருட்பணிி.   கிருஸ்துவின் வழி என்றால் என்ன? What is the way of Christ? கிறிஸ்துவின் வழி என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களையும், அவர் தந்த மார்க்க த்தையும் பின்பற்றுவதாகும். இயேசுவின் வாழ்க்கை, போத னைகள், மற்றும் தியாகம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் விண்ணரசிற்கு செல்லும் வழியை அவர் காட்டுகிறார்.  இயேசுவே—வழி, சத்தியம், வாழ்வு, இதைப் பின்பற்றுவோர் நித்திய வாழ்வில் இடம் பெறுவர்.  அவர் தம்மைப் பின்பற்றுவோருக் கு வழிகாட்டுபவராகக் கருதப்படு கிறார். கிறிஸ்தவ வழி, இயேசு வின் போதனைகளை பின்பற் றுதல், அவருடைய வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுதல் மற்றும் பிறருக்கு நன்மையை செய்து நல்ல செயல்களைச் செய்தல் ஆகியன அடங்கியது.  தீர்க்கர் தானியேல் ஞானம்நிறை ந்தவனாய், உண்மையுள்ளவ னாய், கர்த்தரின் வழியில் நடந்து, நலமானதைச் செய்த படியால் அவனுடன் இருந்த அதிகாரிக...

உண்மையின் உருவான கிறிஸ்துவில் நம்பிக்கை. (209) Believing in Christ the Truth. விடுதலைப்பயணம் 34: 1-9, திருப்பாடல் 119: 89-96. எபேசியர் 4:7-16, யோவான் 17: 6-19.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்த கிறித்துவின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது, " உண் மையின் உருவான கிறிஸ் துவில் நம்பிக்கை"   உலகில், சத்தியங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்து வைப் பொறுத்தவரை, சத்தியம் மாறாது. ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவரின் சத்தியம் மாறாது. ஆனால் மாற்றத்தை கொடுக்க கூடியது. நற்செய்தி என்பது நம்பிக்கை . நற்செய்தி என்பது அமைதி . நற்செய்தி ஒரு வாக்குறுதி . ஆனால், ஆண்டவரே உண்மை யான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! என இறைவாக்கினர் எரேமியா  கூறுகிறார்,(எரேமியா 10:10)   உண்மை (சத்தியம்) என்றால் என்ன?  கிறிஸ்துவை அறிவதே உண்மை அவரை நம்புவதே உண்மை அவர் மீது பற்று உறுதி கொள்வதே உண்மை. நற்செய்தியாளர் யோவான், "இயேசுவே இறைமக னாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும் (believing) , நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காக வுமே (Eternal life) இந்நூலில் உள்ளவை எழுதப்பெற் றுள்ளன. (யோவான் நற்செய்த...