உலக உழைப்பாளர் தினம். தச்சர் யோசேப்பு (206). தொடக்க நூல் 1: 26- 2:3.திருப்பாடல்15.2,தெசலோனிக்கர் 3:6-15, யோவான் 5: 1-10
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் உயிர்த்த கிறிஸ் துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் மே 1 உலக உழைப்பாளர் தினம். இந் நன்நாளில் திருவிவிலியத் தின் அடிப்படையில் நாம் தியானி க்க இருக்கின்ற தலைப்பு தச்சர் யோசேப்பு. ஒரு தொழிலாளி. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்ப டுகிறது. இது தொழிலாளர்களை யும், தொழிலாளர்களின் உரிமைக ளையும் நினைவுகூறும் நாளா கும். அமெரிக்காவில் தொழிலா ளர்கள் 8 மணி நேர வேலை கோரி போராடியதன் நினைவாக மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. 1889-ல் நடந்த சோசலிஸ்ட் மாநாட்டில் தொழிலா ளர்களுக்கான 8 மணிநேரவேலை நாள் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.1890-ல் மே 1 அன்று முதல் தொழிலாளர் தினம் கொண்டா டப்பட்டது. யோசுப்பு உழைக்கும் மக்களின் தொழிலாளர் அவர் ஒரு தச்சர். நேர்மையாளர் நீதிமான். ரோமானிய மாகாணமான கலிலே யாவில் உள்ள நாசரேத் நகரில் வசித்து வந்தார்.அவர் அகஸ்டஸ் சீசரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந் தார் . அவர் யூதாவின் எபிரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர் , தாவீது ராஜாவின் வம்சாவளி யைச் சேர்ந்தவர் . அதே கோத்தி ரத்தைச் சேர்ந்த மரியாளை மணந...