Posts

மன்னிக்கும் கிறிஸ்து. The Forgiving Christ . (The second Sunday in Lent) தொடக்க நூல் 4 : 8- 16. தூய மாற்கு 2:1-12. திருப்பாடல் 25. உரோமையர் 5: 6-11.

Image
முன்னுரை: தேசிய மன்னிப்பு நாள்  ( National Sorry Day ), 1905-ஆம் ஆண்டு முதல் ஆஸாதிரேலியா நாட்டின் சட்டப்படி,  ஆஸ்திரேலி யாவின்பழங்குடி மக்களின் குழந்தைகளை, ஐரோப்பிய பண்பாட்டு (European Culture) முறையில் வளர்த்ததை, 1998-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அரசு செய்த மாபெரும் தவறு உலகிற்கு தெரிய வந்தால் பழங்குடி மக்களிடம், வெள்ளை இன ஆஸ்திரேலியர்கள், ஆண்டுதோறும் மே மாதம் 26ஆம் நாளன்று மன்னிப்பு கேட்கும் நாளாக 1998 முதல் கடைபிடிக்கப்படுகிறார்கள.     மனித உரிமைகளை (Human Rights) உலகெங்கும் வலியுறுத்தவும் பாது காக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் UNO 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டது. மற்றும் உலகளாவிய மன்னிப்பு தினம் 1994 இல் CECA (கிறிஸ்துவின் தூதர்) ஆல் நிறுவப்பட்டது. இது முதலில் கனடாவிலேயே தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பிரபலமடைந்ததால், இது உலகளாவிய மன்னிப்பு தினம் என மறு பெயரிடப்பட்டது. மன்னிப்பு என்றால் என்ன ? மன்னிப்பு என்...

வார்த்தையும் வாழ்க்கையும் PETITION And PROMOTION. யோவான் 4:46-54.

Image
முன்னுரை:  யோவான் நற்செய்தியில் இயேசுவின் முதலாம் அற்புதம் தொடங்கி(கானா ஊர் திருமணம் - தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல்- யோவான் 2:11)  மொத்தம் 7 அற்புதங்கள் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பானவர்களே! இயேசு இங்கு மூன்றுவிதமான இன மக்களை சந்திக்கிறார். முதல் அற்புதம் யூதர்களுக்கும், சீடர்களுக்கும்( Jews) இரண்டாவதாக இயேசு சந்திக்கும் பெண் சமாரியர் ( Samaritan- யோவான் 4:1-42.) மூன்றாவதாக அவர்சந்திக்கும் மனிதர் புற சாதியினர் (Gentiles) இது இயேசு" அனைவருக்குமான கடவுள் (Universal God)" என்பதை தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்ல மக்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் தேடுவதாக இயேசு கூறுகிறார்.(யோவான் 4:48). இந்த அற்புதங்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கவும், இயேசு கடவுளின் திருமைந்தன் என்பதை உறுதிபடுத்தவே பல அற்புதங்களை செய்தார்.            கப்பர்நாகூம் என்ற ஊர் கலிலேயா கடற்கறை யோரம் அமைந்துள்ள பட்டினம்.இது கானாவிற்கு கிழக்கே 25 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. கானா நாசரேத்திலிருந்து 7:கி.மீ (   (4.3 மைல்)     Healing the royal offi...

George Wishart- a martyr for Christ

Image
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚  ✅ *பிப்ரவரி 25* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *ஜார்ஜ் விசார்ட் George Wishart* 🛐 மண்ணில் : 1513 விண்ணில் : 1546 ஊர் : மாண்ட்ரூஸ் நாடு : ஸ்காட்லாந்து தரிசன பூமி : ஸ்காட்லாந்து  16ம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து நாட்டில் டண்டி என்னும் இடத்தில் மரணத்துக்கேதுவான பிளேக் நே தொற்றிக் கொண்டது. மரண ஓலம் பெரும் சோகக் ஏற்படுத்தி மனிதர்களைக் கலங்கச் செய்தது.  அவர்கள் மரிக்கும் முன் இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பைப் பெற வேண்டாமா? அவர்களும் பரலோகம் செல்ல வேண்டுமல்லவா? பிரபல நற்செய்தியாளரான ஜார்ஜ் விசார்ட் இக்கேள்விகளால் மனம் உடைந்தார்; டண்டீ பகுதிக்கு விரைந்து சென்றார்; மரணத்தருவாயிலிருந்த மக்களின் பாவம் நீங்கச் செய்ய மன்றாடி ஜெபித்தார்; மன்னிப்பைப் பெற்றுத் தந்தார்; மகிழ்ச்சியான மரணங்கள் அங்கு நடந்தன; பலர் அற்புத சுகங்களையும் பெற்றனர்.  ஜார்ஜ் விசார்ட்டின் சிறந்த பிரசங்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில மக்கள் அவரை வெறுத்தனர். எனவே அவர்கள் அவரைக் கொல்லவும் திட்டமிட்டனர். மான்ட்ரோஸ் என்ற இடத்தில் அவரைக் கொல்லுவதற்காக சுமார் 60 எதிரிகள் ஒளிந்திருந்தன...

தூய்மையாக்கும் கிறிஸ்து.The Cleansing of Christ.செக்கரியா: 13: 1-9. 1யோவான் 1:5-10. மாற்கு 1:40-45. திருப்பாடல் 130.

Image
 முன்னுரை : அன்பானவர்களே! கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்ற சொற்றொடர் வேதாகமத்தில் இரண்டு முறை வருகிறது, பழைய ஏற்பாட்டில் ஒரு முறை (ஏசாயா 6:3) மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒரு முறை (வெளிப்படுத்துதல் 4:8). இரண்டு முறையும், இந்த சொற்றொடர் பரலோகவாசிகளால் கூறப்படுகிறது. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்பது அவருக்கு மட்டுமே பொருத்தமாகும். வெளிப்படுத்தின விசேஷம் 4:8 ல்"அந்த நான்கு ஜீவன் களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ள வவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. பழைய ஏற்பாட்டில் "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக் கேற்ற பரிசுத்த வான் களாயிருப்பீர்களாக”. (லேவியராகமம் 20:26) அடிப்படையான தேவை பரிசுத்தம். அவ்வாறே மத்தேயு 5:8ல்  "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்". சங்கீதம் 24:3,4ல் "யார் கர...

ST. POLYCARP

Image
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚  ✅ *பிப்ரவரி 23* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *செயிண்ட் போலிகார்ப் Saint Polycarp* 🛐 மண்ணில் : ~ கி.பி. 65 விண்ணில் : ~ கி.பி. 155 ஊர் : சீமீர்னா (இஸ்மிர், துருக்கி) தரிசன பூமி : சீமீர்னா   கம்பத்தில் கட்டப்பட்டவராக விறகுகள் சூழ்ந்திருக்க, எரித்துக் கொல்லப்படுவதற்குக் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார் 86 வயது முதியவர். உள்ளத்திலோ அவர் இளைஞர். Saint, Polycarp Martyr, Church Father and Bishop of Smyrna Born AD 69 Die AD 155 (aged 85-86). விசுவாசத்தில் வீரம் நிறைந்தவர். தூய யோவானின் சீடர். மரணத்தைக் கண்டு பயப்படாதவர். கிறிஸ்துவினிமித்தம் துன்பப்படுவதை இன்பமாக எண்ணியவர். அவர்தான் சிமிர்னா பேராயர் போலிகார்ப். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம் அது! இராயனை கடவுள் என்று வணங்கக் கட்டளையிடப்பட்ட வேளை; இராயனை வணங்காதவர்கள் சிங்கத்திற்கு இரையாகப் போடப்பட்டனர்; கிறிஸ்துவைப் பின்பற்றியதால் பலவித சித்தரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாயினர். போர்வீரர்கள் போலிகார்ப்பைப் பிடித்தனர், தரதரவென இழுத்து வந்தனர். விசாரணைகள் விலாவாரியாக நடந்தன; கிறிஸ்துவைப்...

Ash Wednesday. சாம்பல் புதன். சிலுவை: மனந்திரும்புதலுக்கு ஓர் அழைப்பு, CROSS: A call to Repentance. ஏசாயா 1:16-20.. 2. கொரிந்தியர் 7:8-16. மாற்கு 1:12-15.

முன்னுரை: சாம்பல் புதன் என்றால் என்ன? நாற்பது நாள் நீடிக்கின்ற லெந்து காலத்தின் முதல் நாள் இதுவே.இயேசு தன் ஊழியத்தை ஆரம்பிதப்பதற்கு முன்பாக நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர்.(காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது சாம்பல் புதன். (Ash Wednesday) சாம்பல் தவத்திற்கும் (meditation)   தன்னொறுத்தலுக்கும் ( self denial) மன மாற்றத்திற்கும் (transformation) அடையாளம். Lent leads us to denounce our sins one by one. சாம்பல் எளிமையின் அடையாளம். சாம்பல் துக்கத்திற்கு அடையாளம். சாம்பல் உண்ணா நோன்பின் அடையாளம். சாம்பல் மன மாற்றத்திற்கான அடையாளம் ‌.மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் நீ மண்ணுக்கு திரும்புவாய் என்பதை உணர்த்துவது சாம்பல் புதன். பாவசெயல்களை விட்டொழிப்பதே லெந்து காலத்தின் அடையாளம். இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள்...

மறுவுருவத்திற்கான காலம் லெந்து. Lent : A Time for Transformation ஏசாயா 44: 21-28, சங்கீதம் 6, யோவான் 2: 1-11, ரோமர் 11:13-24

Image
முன்னுரை:  What is Lent? According to Webster Dictionary, ' Lent is a period of fasting and regret for one's sins that is observed on the 40 weekdays from Ash Wednesday to Easter by many churches."  Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த் தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும். நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள்கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக் கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. லெந்து என்பது துளிர் விடும் காலம். இது மனமாற்றத்திற்கான காலம்.மனம் திரும்பும் காலம்.  A time for Transformation. நம்மையே மாற்றிக்கொள்ளும் காலம். இதையே ஏசாயா தீர்க்கன் 44:21-28ல் யாக்கோபு என்ற இஸ்ரவேல...